விருதுநகரில் சேதமான சாலைகளை சீரமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு
விருதுநகர், அக்.9- விருதுநகரில் சேதமான ரயில்வே பீடர் சாலை, புல்ல லக்கோட்டை சாலை மற்றும் பாத்திமா நகர் மெயின் ரோடு ஆகியவற்றை சீரமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் நகராட்சி கூட்ட அறையில் தியாகி இமானு வேல் சேகரன் படத்தை நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் திறந்து வைத்தார். இதையடுத்து, மாவட்ட தொழில்மையம் மூலம் கடன் பெறுவது, வங்கிகளின் கடன் பெறுவது, மகளிர் சுய உத விக்குழுக்கள் மூலம் கடன் பெறுவது பற்றி நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகள் விளக்கம ளித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: ரயில்வே பீடர் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு சீரமைக்க வேண்டுமென உறுப்பினர் முத்துலட்சுமி தெரிவித்தார். இதையடுத்து பேசிய தலைவர், தற்போது சீர மைக்கப்படும் சாலைகளின் இருபுறமும் உள்ள மணல் மேடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவித்தார். நகராட்சிக் கூட்டத்திற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தோம். அழைக்கவில்லையா? என உறுப்பினர் கலையரசன் கேள்வி எழுப்பினார். பின்பு பேசிய தலைவர், மெயின் குழாய் பதிக்கும் பணியை முதலில் முடிக்க வேண்டுமென அமைச்சர் தெரி வித்துள்ளார். அதன் பின்பே குடியிருப்பு பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடைபெறும் என்றார். குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்ய மனுக் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லையென முத்துலட்சுமி தெரிவித்தார். அப்போது பேசிய ஆணையாளர், சொத்து வரி பெயர் மாற்ற விண்ணப்பிக்கும்போதே குடிநீர் வரியையும் மாற்றம் செய்து விடலாம் என்றார். ஒரே வீட்டிற்கு சொத்து வரி ஒரு வார்டிலும், குடிநீர் வரி ஒரு வார்டிலும் உள்ளது என உறுப்பினர் ஜெயக்குமார் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆணையாளர், இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரே வரி எண்ணில் பாதாள சாக்கடை, குடிநீர் கட்டணம், சொத்து வரி, குப்பை வரி என அனைத்தையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். செந்திவிநாயகபுரம் தெருவில் குடிநீர் இணைப்பு களை இலவசம் என தெரிவித்து விட்டு இணைப்பு வழங்கி விட்டனர். தற்போது, வீட்டிற்கு ரூ.13,500 செலுத்தக் கூறு வதாக உறுப்பினர் பேபி புகார் தெரிவித்தார். அப்போது பேசிய ஆணையாளர், இலவச இணைப்புகள் கிடை யாது. கண்டிப்பாக பணம் கட்ட வேண்டும் என்றார்.
டாஸ்மாக் கடை முன்பு ஒருவர் வெட்டி படுகொலை
சாத்தூர், அக்.10- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சாத்தூர் அருகே இருக்கண்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் காந்திராஜா (33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர், சாத்தூர் பேருந்து நிலை யம் பின்புறம் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் ஊழி யராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர்கள் திடீ ரென அரிவாளால் காந்திராஜாவை வெட்டியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, சக ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
ஒருவர் குத்திக் கொலை
அருப்புக்கோட்டை, அக்.10- அருபபுக்கோட்டை ஆத்திபட்டியைச் சேர்ந்த கண பதி என்பவர் மகன் சரவணக்குமார்(24). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாம். இந்நிலையில், வீட்டின் பின்புறம் தூங்க சென்றவர் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா வியாபாரிகள் கைது
தேனி, அக்.10- பாளையம் அருகே கோம்பை -கம்பம் சாலையில் பாளையம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பிக்கப் வேன், இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது 12 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த பாண்டி, க.புதுப்பட்டி யைச் சேர்ந்த கவுதம், கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த கார்த்திக், சூரியன் ஆகியோரை கைது செய்த னர். அவர்களிடமிருந்து ரூ 18900 மற்றும் இருசக்கர வாக னம், பிக்கப் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.