விருதுநகர், மார்ச்.5- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் 5 நகராட்சிகளில் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியாக அறி விக்கப்பட்ட பின் முதல் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற்றுள்ளது. இதில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த மாதம் தேர்தல் நடை பெற்றது. இந்நிலையில், 34 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சங்கீதா மேயர் வேட்பாளராக வும், 35 ஆவது வார்டு பகுதியில் வெற்றி பெற்ற விக்னேஷ் பிரியா துணை மேயராகவும் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட னர். இதையடுத்து, வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேர்தலில் இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். விருதுநகர் நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஆர்.மாதவன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நகர் மன்ற துணைத்தலைவராக திமு கவை சேர்ந்த தனலட்சுமி போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.. விருதுநகர் நகராட்சியில் 30 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஆர்.மாதவன் நகர்மன்றத் தலை வராக போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டார். 10 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தன லட்சுமி துணைத்தலைவர் பதவிக் கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இருவரும் வெற்றி பெற்றதாக விருதுநகர் நகராட்சித் தேர்தல் நடத்தும் அதிகாரியும் நகராட்சி ஆணை யருமான சையது முஸ்தபா கமால் அறிவித்தார். தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு விருதுநகர் தி மு க சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ஆர்.சீனிவாசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் சாத்தூர் நகர் மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த குருசாமி, துணைத் தலைவராக அசோக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டையில் நகர்மன்றத் தலைவராக சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம், துணைத் தலைவராக க.பழனிச்சாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.