districts

img

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மதுரை, ஆக.1- மதுரை வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் மற்றும் திடக்கழிவு மேலா ண்மை மையம் மற்றும் அவனியாபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையைத்தில் மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிர வீன்குமார் ஆகஸ்ட் 1 அன்று ஆய்வு மேற்கொண்டார்.  மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதி களில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக் கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உர மாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.  குப்பை சேகரிப்பு மையத்தில் குப்பை களில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர  கழிவுகளை பிரிக்கும் இடங்கள், திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாக னங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இடத்தை யும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறை கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்  கப்படும் தொடர் மருத்துவ பரிசோதனை கள் குறித்து ஆணையாளர் கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின்போது நகர்நல அலு வலர் மரு.வினோத்குமார், மாமன்ற உறுப்பி னர் கருப்பசாமி உட்பட மாநகராட்சி அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.