நாகர்கோவில், மார்ச் 20- கன்னியாக்குமரி அருகே அகஸ்தீஸ்வ ரத்திலுள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் வாசுதேவனால் ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல், கல்லூரியில் தொட ரும் சாதிய பாகுபாடுகளை கண்டித்து, நாகர் கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கல்லூரி ஆசிரியர் அமைப் பான மூட்டா, இந்திய மாணவர் சங்கம் கூட் டாக போராட்டம் நடத்தின. விவேகனாந்தா கல்லூரி விலங்கியல் பேராசிரியர் வாசுதேவனால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி கல்லூரி நிர்வா கத்திடமும் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிகை எடுக்காத கல்லூரி நிர்வாகம் மாணவியை இடைநீக்கம் செய்தது. மேலும் பேராசிரியர் வாசுதேவன் நாகர்கோவில் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் முத்து ராமன் என்பவரு டன் கல்லூரிக்கு வந்தார். இதனால் கொதிப்ப டைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்க ணித்து கல்லூரியை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் மீது நட வடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் காவல்துறையினர் வாக்குறுதி அளித்திருந்த னர். ஆனால், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அக்கல்லூரியில் இயற்பியல் துறையின் மூத்த பேராசிரியை ஒருவரை பட்டியல் இனப் பெண் என்ற காரணத்தால் துறைத் தலைவர் பதவி வழங்காமல் அரசு விதிகளை மீறி செயல்படும் விவேகானந்தா கல்லூரி முதல்வர் மற்றும் செயலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மூட்டா அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இக் கோரிக்கைகளை வலியுறுத்தி சனியன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மூட்டா மண்டலம் 4 தலைவர் ஐசக் அருள் தாஸ் தலைமை வகித்தார். மூட்டா மத்திய தலைவர் ராதா கிருஷ்ணன், சங்கத்தின் மத்திய துணை தலைவர் சைலா குமார், மத்திய இணை பொது செயலாளர் கலைவாணன், மண்ட லம் 4 செயலாளர் ராஜ ஜெயசேகரன், பொரு ளாளர் ராஜா, கன்னியாகுமரி மாவட்ட ஆசி ரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் பிரபோ குமார், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வி. நாக ராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் கணேசன், பள்ளி ஆசிரி யர் மற்றும் அலுவலர் கூட்டமைப்பு தலை வர் வினோத், பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில குழு உறுப்பினர் வேலவன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சந்துரு மற்றும் மாணவ மாணவியர் ஆசி ரியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.