புதுதில்லி, ஜூன் 26- இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தையும் பலவீனப்படுத்திவிட்டு, இப்போது ஏதோ சுற்றுச்சூழல் பாதுகாவலர் போல உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடுவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும் ஒன்றிய சுற்றுச்சூழல்துறை முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, பிர தமர் மோடி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார். ‘உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ‘லைப்’ (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற சர்வதேச இயக்கத்தை தொடக்கி வைக்க உள்ளேன். இந்த இயக்கம், நீடித்த வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த வளர்ச்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும்’ என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தான் ஜெய்ராம் ரமேஷ் கடு மையாக சாடியுள்ளார். ‘இன்றைக்கு உலக சுற்றுச்சூழல் தினம். 1973-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண் டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ‘லைப்’ என்ற சர்வதேச இயக்கத்தை ‘உலக குரு’ (பிரதமர் மோடி) தொடங்கிவைப்பது, உச்சபட்ச கபட நாடகமாகும். இந்தியாவில் அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களையும் பலவீனப் படுத்தியிருக்கும் பிரதமர்தான் (மோடி), உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலர் போல தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். “பிரதமர் மோடியின் அறிவிப்பின் மூலம், பருவநிலை மாற்றம் குறித்த அவரு டைய புரிதல் தெளிவாக வெளிப்பட்டு விட்டது. பருவநிலை மாற்றம் எதுவும் இன்றைக்கு இல்லை. ஆனால், நமது சகிப்புத்தன்மையும், பழக்க வழக்கங்க ளும்தான் மாறியிருக்கின்றன” என்று காங்கி ரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவ ரான பவன் கெராவும் விமர்சனங்களை வைத்துள்ளார்.