மதுரை, அக்.11- மதுரை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த விவசாயத் தொழிலாளர் களுக்கு 10 வாரங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் மூன்று மாதங்களாக கொடுக்கப்படாத ஊதியத்திற்கு காலதாமதமாக கொடுக்கும் ஊதியத்திற்கும் சட் டப்படி வட்டி சேர்த்து உடனே வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் ஊதியம் கொடுப்பதை உறுதி செய்யவும், 200 நாட்கள் வேலை தினக்கூலி ரூ.600 வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழு வதும் ஆர்ப்பாட்டம் புதனன்று நடை பெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் திருவள்ளுவர் சிலை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் ஜெ.காசி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சொ.பாண்டி யன் துவக்கி வைத்தார். பொரு ளாளர் வி.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் து.ராம மூர்த்தி, மாவட்டச் செயலாளர் வி. உமாமகேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர்கள் எல்.கௌ சல்யா, ஏ.தனசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். சிவகங்கை சிவகங்கை மாவட்டம் முழு வதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100நாள் வேலைத் திட்டத்தில் வேலை கொடுத்து தினம்தோறும் ரூ600 கூலி கொடுக்க கோரி விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கீழப்பூங்குடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டப் பொருளாளர் முத்துகருப்பன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் தனசேகரன், ஒன்றியப் பொருளாளர் மகாலிங்கம், மாவட்டத் தலைவர் மணியம்மா, மாவட்டச் செயலாளர் ஏ.பொன் னுச்சாமி ஆகியோர் பேசினர்.