districts

img

இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகமும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை

இராமநாதபுரம் ஹாஜா மஹாலில் டிசம்பர் 22 வியாழனன்று இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகமும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறையும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று , முதல் விற்பனையை துவக்கி வைத்துப் பேசினார்.  இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, கைத்தறித் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.