இராமநாதபுரம் ஹாஜா மஹாலில் டிசம்பர் 22 வியாழனன்று இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகமும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறையும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று , முதல் விற்பனையை துவக்கி வைத்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, கைத்தறித் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.