மதுரை, செப்.15- மகளிர் உழைப்புக்கு அங்கீகா ரம் அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சி புரத்தில் தொடங்கி வைத்தார். இதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தனர். மதுரை மாநகரில் எல்லீஸ் நகர் பகுதியில் மகளிர் உரிமைத் தொ கைக்கான ஏடிஎம் அட்டைகளை மாநகராட்சி மேயர் வ.இந்திராணி தலைமையில் தகவல் தொழில் நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில், துணை மேயர் தி.நாகராஜன், மாந கராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, வடக்கு மண்ட லத் தலைவர் சரவண புவனேஸ் வரி, மாமன்ற உறுப்பினர்கள் வை. ஜென்னியம்மாள், மகாலெட்சுமி, விஜயா குரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருதுநகர் அருப்புக்கோட்டை, காரியா பட்டி வட்டம் கல்குறிச்சி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வரு வாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், நிதி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகி யோர் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தனர். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகர் மன்றத் தலைவர்கள் சுந்தரலட்சுமி (அருப்புக்கோட்டை), ஆர்.மாத வன் (விருதுநகர்) ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி
தேனி மாவட்டம் வீரபாண்டி யில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திட்டத்தை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பி னர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டி பட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர் . இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொ டங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பி னர்கள் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் (இராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி), இராம.கருமாணிக்கம் (திருவாடா னை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி), தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), காரைக்குடி நகர் மன்றத்தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், பேரூராட்சி தலைவர்கள் சேங்கை மாறன் (திருப்புவனம்), ராதிகா (கா னாடுகாத்தான்), சாந்தி (பள்ளத் தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் சின் னாளபட்டியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடை பெற்ற நிகழ்வில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டத்தை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார், திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட எஸ்.பி., பாஸ்க ரன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத் தலைவர் ஹேமலதா மணிகண் டன், பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணை தலைவர் ஆனந்தி பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.