districts

img

மானாமதுரை வைகை ஆறு தூய்மை பணியை பார்வையிட்ட அமைச்சர்

சிவகங்கை, செப்.23- சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலை களைப் பாதுகாக்கும் பணி வைகையாற்றி லிருந்து தொடங்கப்பட்டுள்ளது. கடந்த  இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பு வனம் பேரூராட்சி பகுதியிலுள்ள வைகை  நதிக்கரையிலும், மானாமதுரை நகராட்சிக் குட்பட்ட வைகை நதிக்கரை பகுதியிலும் தூய்மை பணிப் நடைபெற்று வருகிறது.  இப்பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், விவசாயி கள், கல்லூரி மாணவிகள், இந்தோ-திபெத்  எல்லை காவல் படையினர், பொதுமக்கள் மற்றும் நீர்நிலைப் பாதுகாப்பு உறுப்பி னர்கள் கரம் கோர்த்துள்ளனர். தூய்மைப் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட  ஆட்சியர்ஆஷா அஜித், மானாமதுரை  சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக் குமார், மானாமதுரை நகர் மன்றத்தலை வர் மாரியப்பன் கென்னடி, ஊராட்சி ஒன்றி யக் குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, மானாமதுரை நகராட்சி ஆணையாளர் ரெங்கநாயகி மற்றும் நீர்வளத்துறை அதி காரிகள் பார்வையிட்டனர்.