districts

img

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

சிவகங்கை, ஜூலை 6-  சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பொய்யலூர் ஊராட்சி மன்ற அலு வலகக் கட்டுமானப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்து, பாடத்தான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மாலை அணிவித்து பெற்றோர்களுக்கு பாராட்டுக் களை தெரிவித்தார்.     பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை யும், தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயி லும் 15 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி களை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சி.பிரபாகரன், மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர் பெ.சுவாமிநாதன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அ.சொர்ணம் அசோ கன், ஊராட்சி மன்றத்தலைவர் ப.திவ்யநாதன், வட்டார வேளாண்மை ஆலோசனைக் குழுத்தலை வர் ந.நெடுஞ்செழியன், வட்டாட்சியர் ம.மாணிக்க வாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் த.அழகு மீனாள், உதவிப்பொறியாளர் சி.வீரப்பன், ஆசிரி யர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.