சிவகங்கை ஆக.16- முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்றது. இதில் 347 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் 24 ஊராட்சி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.12.17 கோடி மதிப்பீட்டிலான வங்கி பெருங்கடனுதவி களை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலை வர் ஆஷா அஜித தலைமை வகித்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், இம் முகாம்களின் மூலம் வேலை வாய்ப்பினை பெறுகின்றவர்கள், கூடுதலாக தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டு, அதன் மூலமும் சிறந்த வேலை வாய்ப்பினைப் பெற்று பயன்பெற வேண் டும். தங்களுக்கான துறையை தேர்ந்தெ டுத்து, அதில் சாதித்து காட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) தேவேந்தி ரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலெட்சுமி, சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் இந்திரா, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, சிவ கங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார் கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.