தேனி, செப்.9- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழனன்று தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள பொது-தனியார் ஒப்பந்தத்தில் செயல்பட்ட கிருஷ்ணா ஸ்கேன் பரிசோதனை மையம் ஆய்வு செய்யப்பட்டது. அங்கிருந்த நோயாளிகளிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். இதில் 10 பேரில் 7 பேரி டம் பணம் பெற்றுக் கொண்டு ஸ்கேன் பரிசோதனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஸ்கேன் மையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அவர் உத்தரவிட்டார். மேலும் தேசிய நலவாழ்வு குழு மத்தின் மூலம் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் வரவழைக்க வும், அதற்கான பணியாளர்களை நியமிக்கவும் அமைச்சர் அறி வுறுத்தினார்.