districts

img

திண்டுக்கல் மாநகராட்சி மேம்பாட்டுக்கு திமுக, சிபிஎம் வேட்பாளர்களை ஆதரியுங்கள் பிரச்சாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி வேண்டுகோள்

திண்டுக்கல், பிப்.12- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக வேட்பாளர் களை ஆதரித்து சனிக்கிழமை யன்று கூட்டுறவுத்துறை அமைச் சர் ஐ.பெரியசாமி வாக்கு சேக ரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பேசிய தாவது:  தலைவர் கலைஞர் ஆட்சி யில் நான் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது ஆர்.எம்.காலனி பகுதியில் குடி யிருக்கும் வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு மக்களின் 40 ஆண்டு களாக நீடித்து வந்த பத்திர பிரச்ச னையை தீர்த்து வைத்துள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மறைந்த தலைவர் என்.வரத ராஜன், இந்த தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த கே. பாலபாரதி ஆகியோர் இப்பகுதி மக்களின் கோரிக்கையான பத்தி ரம் பெறுவதற்காக போராட்டங் களை நடத்தினர். கடந்த 30  ஆண்டுகளாக பாறை புறம் போக்கு அதாவது திண்டுக்கல் நரிப்பாறையில் குடியிருப்போ ருக்கு பட்டா, ஆற்றுப்புறம் போக்கு, குளத்துப்புறம்போக்கு, கல்லாங்குத்து புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு பட்டா  வழங்குவது தொடர்பாக அன் றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த இன்றைய  முதல்வர் ஸ்டாலினுடன் இணை ந்து திண்டுக்கல் நகரத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 4900 குடும் பங்களுக்கு அவரவர் வீடுகளை சொந்தமாக்கி தந்தோம். அன் றக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலபாரதி வேண்டு கோளுங்கிணங்க செட்டி நாயக்கன்பட்டி வண்டிப்பாதை மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கினோம். மருதாணிக்குளம்  பகுதி மக்களுக்கு பட்டா கொடுக் கக்கூடாது என்று உச்சநீதிமன றத்தில் தடையாணை பெறப்பட் டுள்ளது. அதனால் அங்கு வழங்க முடியாத நிலை.  திண்டுக்கல் மாநகராட்சியில்  வசிக்கும் மக்களின் மேம்பாட் டுக்கு திமுக, சிபிஎம் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண் டும். 2 ஆவது வார்டில் போட்டி யிடும் சிபிஎம் வேட்பாளர் கே.எஸ். கணேசன் மிகச்சிறந்த பண்பாளர், மக்களின் அன்பை பெற்றவர். யாரிடமும் கடிந்து பேசாதவர். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டும். 3வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திராணி தேர்ந்தெடுக்கப் பட்டால் நிச்சயம் இப்பகுதி மக்க ளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். அவருக்கு உதய சூரி யன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசி னார்.  இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார் (பழனி), காந்திராஜன் (வேட சந்தூர்), முன்னாள் திமுக நகர் மன்றத்தலைவர் ம.பசீர்அகமது, சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிகண் டன், மதிமுக மாவட்டச்செயலா ளர் என்.செல்வராகவன் உள் ளிட்டோர் உடனிருந்தனர். (நநி)