districts

img

நெருக்கடியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள்

புதுதில்லி,டிச.22-   குறு, சிறு, நடுத்தர தொழில்க ளை பாதுகாக்கக்கோரி டிசம்பர் 20  அன்று நாடு முழுவதும் உள்ள 170 க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் அமைப்புகள் எல்லா  மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங் களை நடத்தின. இந்நிலையில்  நெருக்கடியில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்கள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கான முன் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தந்துள்ளார். 

கச்சா பொருள் விலை உயர்வு

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான கச்சாப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உருக்கு, தாமிரம், அலுமினி யம், நெகிழி விலைகள் கடந்த ஒரு ஆண்டில் 40 லிருந்து 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இது குறு, சிறு, நடுத்தர தொழில்களை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளன. எனது மதுரை தொகுதியில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. “மடிசியா” அமைப்பு இப் போராட்டத்தில் பங்கேற்கிறது.  கோயம்புத்தூர் என்ஜினியரிங் தொழில்கள் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதிலுமே இப் பாதிப்புகள் பரவியுள்ளன. ஜவுளித் தொழில் நூல் விலையின் கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்கள் லட்சக்கணக்கான வேலை இழப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

என்ன செய்ய வேண்டும்?

கச்சாப் பொருட்களின் விலை உயர்வு அரசின் உறுதியான தலையீட்டால் கட்டுப்படு த்தப்பட வேண்டும்; விலை நிலைமைகளை கண்காணிக்கவும், இறக்குமதிகள் குறை மதிப்பீடுகளுக்கு ஆளாவதை கண்காணித்து தடுக்கவும் அமைப்பு ரீதியானஏற்பாடு வேண்டும் என்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங் களின் அமைப்புகள் கோருகின்றன. இது பெரு மளவு வேலை இழப்புகளையும், ரூபாய் மதிப்பின் நிலைத் தன்மையையும் பாதிக்கக் கூடிய அபாயத்தையும் உள்ளடக்கிய பிரச்சனை ஆகும். இத்தகைய மிக மிக முக்கி யமான பிரச்சனை மீது அவசர விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டியுள்ளது. இதற்கான ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான அறிவிப்பை சு.வெங்கடேசன் எம். பி தந்துள்ளார்.