மதுரை, ஏப்.6- மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக் கடை வரை 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரயில் திட்டத் திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்ப தற்கான ஒப்பந்தம் ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல் டன்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்து வதற்கான ஆலோசனைக்கூட்டம் அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதி யில் ஏப்ரல் 6 வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித் திக் கலந்து கொண்டார். மேலும் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள், ஆர்.வி கன்சல்டன்ட் அதிகாரிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், மாவட்ட வருவாய் அலு வலர் சக்திவேல் மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஆறுமுக சாமி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனந்த் பத்மநாபன் மற்றும் நில அளவை, குடிநீர் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் மெட்ரோ ரயில் வழித்தட விவரங்கள் குறித்த மேப் மற்றும் புகைப் படங்கள், ரயில் நிறுத்த நிலையங்கள், மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், பூமிக்கு அடியில் டனல் அமைப் பது குறித்து ஆர்.வி.கன்சல்டன்ட் அதிகாரி கள் எடுத்துரைத்தனர். இதில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் மெட்ரோ ரயில் வழித் தட வரைப்படங்களை காட்டி அதிகாரி களுக்கு விளக்கம் அளித்தார்.
அடுத்த தலைமுறைக்குமான திட்டம்
மேலாண்மை இயக்குனர் சித்திக் பேசு கையில், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 100 ஆண்டுகளுக்கானது. இதில் நிலம் எடுப்பதில் சிரமம் உள்ளது. இத்திட்டம் வாழ்நாள் முழு வதும் அடுத்த தலைமுறைக்கும் உள்ள திட் டம் ஆகும். திட்டத்தை விரைந்து செயல் படுத்த அனைத்துத்துறைகளும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும். சில பிரச்ச னைகளை தீர்த்து அடுத்த ஆண்டு திட்டம் தொடங்கினால் 2027 இல் தான் இதை நாம் முடிக்க முடியும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சர்வே பணிகள், குடிநீர் குழாய், நெடுஞ்சாலை, பூமிக்கு அடியில் செல்லும் மின்சார கேபிள் கள் இவை குறித்து அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், மதுரை மாநக ராட்சி, காவல்துறை இணைந்து வழித்தட பகு திகள் குறித்தும், பார்க்கிங், பேருந்து நிறுத் தம், பொதுமக்கள் வசதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அறநிலை யத்துறை, மதுரை மாநகராட்சிக்கு சொந்த மான நிலங்களை எடுப்பதற்கான நடவ டிக்கை எடுக்க வேண்டும். தோப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில்களை நிறுத்துவதற்கான டெப்போ அமைக்க முடி யுமா என ஆய்வு செய்ய வேண்டும். டெப்போ விற்கு 30 ஏக்கர் நிலம் தேவைப்படும். பெரியார் பேருந்து நிலையம், மதுரை ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் மூன்றும் சந்திக்கும் அவற்றை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் ஒரு ரயில் நிறுத் தம் அமைக்க வாய்ப்புள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய் யும் பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல்...
திட்ட அறிக்கை தயாரிக்க நிலம் தொடர் பான சர்வே பணிகளை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். கோரிப்பாளை யம் வசந்தநகர் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டரும், மேல்தளத்தில் 26 கிலோமீட்டரும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மரங்களுக்கு எந்த பாதிப்பும் இல் லாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் விமான நிலையத்தை இணைக்கும் திட்டம் உள்ளது. ஆனால் அதை இப்போது செயல்படுத்த முடி யாது. மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்ட பிறகு 3-4 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை விமான நிலையத்தை இணைக்க நட வடிக்கை எடுக்கப்படும். வருங்காலத்தில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மெட்ரோ ரயில் திட் டம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் அ.மு.சித்திக் பேசியதாவது: திட்டத்திற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள் ளது. டிபிஆர் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியானது தற்போது துவங்கியுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் 25 கிலோமீட்டர் மேல் பகுதியிலும், ஐந்து கிலோமீட்டர் சுரங் கப்பாதையிலும் செல்லும் வகையில் வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுத்தம் 14 நிலையங்கள் மேல் தளத்திலும், 4 நிலையங்கள் தரை தளத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒன் றிய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று 2024 மே அல்லது ஜூன் மாதத்திற்குள் நில அளவீடு பணிகள் தொடங்க வாய்ப்புள் ளது. 2024 டிசம்பர் மாதத்தில் கட்டுமானப் பணி துவங்கி 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக் கப்படும். 60 சதவீதம் நிதி நிறுவனங்கள் நிதி யும், 20 சதவீதம் மாநிலம், 20 சதவீதம ஒன் றிய அரசு நிதியுடன் திட்டம் செயல்படுத் தப்படும்.
வைகை ஆற்றுக்கு அடியில் ரயில் பாதை
மதுரை என்பது ஒரு பாரம்பரிய தொல்லி யல் நகரம். ஆகையால் கோவிலைச் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் சுரங்கப்பாதை மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படும். சுரங் கப்பாதை அமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இருப்பினும் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன் னும் ஓரிரு வாரத்தில் மதுரை மாநகரில் மெட்ரோ வழித்தடம் அமைய உள்ள பகுதி களில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் சர்வே பணி துவங்கும். மூன்று பெட்டிகள் கொண்ட ரயில் பயணிக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 5 முதல் 10 நிமி டங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் வரும் வகை யில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிர் காலத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் வரும் வகையில் வடி வமைக்கப்படும். ஐந்து கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதையில் 20 மீட்டர் ஆழத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். வைகை ஆற்றுக்கு அடியில் 20 மீட்டர் ஆழத் தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.