districts

img

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து பலப்படுத்துக!

 தொழிற்சங்கம்- நலச்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

மதுரை, ஜுன் 3- இந்தியா முழுவதும் உள்ள சாதாரண, நடுத்தர மக்களின் நலன்  களைப் பாதுகாக்கும் வகையில், பொதுத்துறையில் கடந்த 52 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரி யண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நான்கு அரசுடைமை பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களையும் ஒன் றாக இணைத்து, ஒரே கழகமாக்கி பலப்படுத்திட வேண்டும் என்று அரசு பொது இன்சூரன்ஸ் தொழிற்  சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத் துள்ளது.  அரசு பொது இன்சூரன்ஸ் அதி காரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்கள் கூட்ட மைப்பு சார்பில் ஜூன் 3 அன்று மது ரையில் “பொதுத்துறை -பொது இன்சூரன்ஸ் பாதுகாப்பு “ சிறப் புக் கருத்தரங்கம் நடைபெற்றது. யுனைடெட் இந்தியா இன்சூ ரன்ஸ் அதிகாரிகள் சங்கத்தின் மண்டலச் செயலாளர் எஸ். ஆனந்த ராஜ் தலைமை வகித்தார். கூட்ட மைப்பின் தென் மண்டல அமைப்பா ளர் எஸ். சவரிமுத்து துவக்கி வைத்து உரையாற்றினார்.

கூட்ட மைப்பில் அங்கம் வகித்துள்ள சங்கங்களின் தலைவர்களான கே.  சுவாமிநாதன், ஏ. குமரவேலு, சஞ்சய் ஜா, ஜான் பால், எஸ், ராஜ சேகரன், சி. மணிகண்டன், பி.  மூவேந்தன், டி. சங்கரநாராயணன், ஜி. ஜெயமூர்த்தி, எம். மணிமாறன்,  பி. பாலமுருகன், கே. விஸ்வ நாதன், டி. கோபால்ராஜ். வி.எஸ். வெங்கட்ராமன் ஆகியோர் கருத்து ரையாற்றினர். ஆர். ராதா கிருஷ்ணன் வரவேற்க. டி. பாண்டி யராஜன் நன்றி கூறினார். ஏ.ஆர். ஆனந்த ஜவஹர் தீர்மானங்களை முன்மொழிந்தார். தென் மாவட் டங்களைச் சேர்ந்த பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும், அதி காரிகளும், முகவர்களும், பணி  ஓய்வு பெற்றவர்களும் கருத்த ரங்கில் கலந்து கொண்டனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பே 2018 இல் ஒன்றிய அரசால் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்  பட்டு, பின்னர் கிடப்பில் போடப் பட்ட அரசு இன்சூரன்ஸ் நிறுவனங் களை இணைத்தல் என்கிற முடிவு, மறு பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்காவிலும், ஐரோப்பா விலும் பல முறைகேடுகளில் ஈடு பட்டதால் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் யர்னஸ்ட் அண்டு யங் தனியார் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தின் பாத கமான பரிந்துரைகளைச் செயல் படுத்தும் முடிவை ஒன்றிய அர சும், பொது இன்சூரன்ஸ் நிர்வாக மும் கைவிட வேண்டும் . தனி யார்மய முயற்சிகள் கைவிடப்பட வேண்டும், அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களில் ஆயிரக்க ணக்கில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்று  வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.