மதுரை, மே 23- மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார் கருமுத்து தியாகராஜர் - இராதா தம்பதியரின் மகன் கருமுத்துகண்ணன். இவர் மதுரை தியாகராசர் பொறியி யல் கல்லூரி மற்றும் தியாக ராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவ னங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக கடந்த 15 ஆண்டு களுக்கு மேலாக பதவி வகித்துவந்தார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்திகொடுத்தார். ஒன்றிய ய அரசின் ஜவுளி குழுத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் மே 23 செவ்வாயன்று அதிகாலையில் காலமானார். இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மதுரை கோச்சடை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட் டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.