districts

img

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவில்லிபுத்தூர், மார்ச்.18- திருவில்லிபுத்தூர் நகரில் குடிநீர் வடிகால் வாரிய அதி காரிகளுடன் குடிநீர் வரும் பாதைகளில் நகர் மன்ற தலை வர் தங்கம் ரவி கண்ணன் ஆய்வு  செய்தார். திருவில்லிபுத்தூரில் தாமிர பரணி குடிநீர் கிடைப்பதற்கு 2013-ஆம் ஆண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் அடிப்படை யில் தினசரி சுமார் 64 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைப்பதற்கு தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டது.  தற்போது மிக குறைந்த அளவே தாமிரபரணி தண்ணீர் வருகிறது. இதனால் திருவில்லி புத்தூர் நகரில் தாமிரபரணி குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தற்போது திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்ற தங்கம் ரவி கண்ணன் திரு வில்லிபுத்தூருக்கு வரக்கூடிய தாமிரபரணி குடிநீர் அளவு சம்பந்தமாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நேரில் பேசி, திருவில்லிபுத்தூருக்கு குடிநீர் வரும் நீர் வழிப்பாதை யை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, குடிநீர் வடிகால் வாரிய பொறி யாளர்கள் மணி, பிரியதர்ஷினி நகராட்சி பொறியாளர் தங்க பாண்டியன் ஆகியோர் உடனி ருந்தனர்.