மதுரையில் மதிமுக மாநில மாநாடு
மதுரை, செப்.2- மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச்செய லாளர் வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகி கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி வலையங்குளத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மு.பூமிநாதன் எம்.எல்.ஏ., பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகர் மாவட்டச் செயலாளர் முனியசாமி, புறநகர் வடக்கு மாவட்டச் செய லாளர் மார்நாடு, தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெய ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடன் உதவி மானியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
மதுரை, செப்.1- மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் மதுரை மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் கடன் உதவி மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வளர்மதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலு வலர் எஸ்.ஜெயபாலன் உட்பட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஆர்வமுள்ள தொழில் முனை வோர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
70 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பென்சனை உயர்த்தி வழங்குக!
மதுரை, செப்.2- 70 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரி யர்களுக்கு பென்ஷனில் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. மதுரையில் அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட் டம் சனிக்கிழமையன்று மாநிலத் தலைவர் கோ. முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செய லாளர் ந.பர்வதராஜன், துணைப் பொதுச் செயலா ளர் டி.மனோகரஜஸ்டஸ், மாநிலப் பொருளாளர் ப. கிருஷ்ணன் உள்ளிட்ட நிர் வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 70 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்களுக்கு பென்ஷனில் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறு வனங்கள் தாமதமின்றி வழங்குவதை அரசு உறுதிப் படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மோடி அரசு பாடப் புத்தகங்களிலும், பள்ளி யிலும் மதவாதத்தை புகுத்து வதால் எதிர்கால சந்ததிக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணி தேனி ஆட்சியர் ஆய்வு
தேனி, செப்.2- கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்களில் பெறப்பட்ட 3,00,880 விண்ணப்பங்களில் 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனி வட்டம் பொம்மைய கவுண்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தம் 3,00,880 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு என 1,09,987 விண்ணப் பங்கள் கள சரிபார்ப்பு பணிகளுக்கு அனுப்பப்பட்டுள் ளன. கள சரிபார்ப்பதற்காக 517 அலுவலர்கள் இப்பணி யில் ஈடுபட்டுள்ளனர். இன்று வரை 72. 21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பணிகள் அனைத்தும் செப்டம்பர் 5-க்குள் முடிக்கப்பட உள்ள தாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
சிவகங்கை, செப்.2- அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி சிவகங்கை, அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணாக் கர்கள் உரிய பங்கேற்பு படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்கு நரிடம் போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575- 241487, 99522 80798 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
காந்திகிராம பல்கலை.,யில் தேசிய பயிற்சிப் பட்டறை கூட்டம்
சின்னாளப்பட்டி, செப்.2- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழ கத்தில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ‘‘பண்பறி ஆராய்ச்சி முறைகள்’’ என்னும் தலைப்பில் தேசிய பயிற்சிப் பட்டறை கூட்டம் ஆக.30 முதல் செப்.2 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. பயிற்சிப் பட்டறையில் பல்வேறு கல்லூரி, பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டனர். இப்பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் கிராமப்புற மேம்பாடு,சுகாதாரம், சமூக அறிவியல், உளவியல் போன்ற பல்வேறு துறை களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனை வர் இல.ராதாகிருஷ்ணன் (பொ), இயக்கவியல் குறித்து முனைவர் முத்துக்குமரன், மருத்துவர்கள் சுதர்ஷினி சுப்பிரமணியம், பிரியதர்ஷினி சிதம்பரம், விஜயப்பிரசாத் கோபிசந்திரன், முனைவர்கள் முத்துக்குமரன், எஸ்எம். கார்த்திக், எம்.குணசேகரன், ஹிலாரியா ஞானசௌந்தரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டத்தில் கனமழை ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சோத்துப்பாறை அணை
தேனி, செப்.2- கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொட ர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வெள் ளிக்கிழமை 306 கனஅடி யாக இருந்த நீர்வரத்து சனிக் கிழமை காலை 620 கனஅடி யாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. நீர்இருப்பு 2312 மி.கனஅடியாக உள்ளது. இதேபோல் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகு தியிலும் கனமழை பெய்தது. வைகை அணையில் மட்டும் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் அணையின் நீர் மட்டம் 47.08 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து காலை 331 கனஅடியாக அதிகரித் துள்ளது. அணையிலிருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப் படுகிறது. மஞ்சளாறு அணைக்கு அணைக்கு 108 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. சோத்துப் பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 73.80 அடியாக உள்ளது. நீர் வரத்து 47 கனஅடி, திறப்பு 3 கனஅடி, கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளதால், சுற்றுலாப் பய ணிகள் குளிக்க வனத்துறை யினர் தடைவிதித்துள்ளனர். மழையளவு பெரியாறு 39, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தம பாளையம் 3.2, சண்முகாநதி அணை 7.4, போடி 18.8, வைகை அணை 150.2, சோத் துப்பாறை 61, மஞ்சளாறு 85, பெரியகுளம் 80.4, வீர பாண்டி 11.2, அரண்மனைப் புதூர் 24, ஆண்டிபட்டி 98.2 மி.மீ மழையளவு பதிவா னது.
திருடிய வாகனங்களை ஆன்லைன் மூலம் விற்று நூதன மோசடி; 6 பேர் கைது
தேனி, செப்.2- தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் ஆன் லைனில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து விளம்பரத்தில் உள்ள எண் ணிற்கு தொடர்பு கொண்டு மதுரை மாவட் டம் கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல் வன் என்பவரிடம் பேசினார். அன்புச் செல்வனிடம் இருந்து காரை ஒன்பது லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்க பேசினார். காரை வாங்கு வதற்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானிக்கு வரும்படி கூறியதை யடுத்து மதன்ராஜ் அங்கு சென்றார். அங்கு அன்புச்செல்வனை தொடர்பு கொண்டபோது, அங்குள்ள தனது நண் பர்கள் ஆனந்த், முருகன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்துச் செல்லுமாறும் அன்புச்செல்வன் கூறினார். இதையடுத்து அவர்களிடம் பணத்தை கொடுத்த மதன்ராஜ் காரை எடுத்துச் சென் றார். சில நாட்கள் கழித்து கார் புரோக்கரான மதன்ராஜ் அதே காரை 9 லட்சத்து 50 ஆயி ரம் ரூபாய்க்கு தஞ்சாவூரைச் சேர்ந்த விக் னேஷ் என்பவருக்கு மறுவிற்பனை செய் தார். இதையடுத்து சில நாட்களில் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டு பிடித்து கேரள மாநிலத்தில் இருந்து வந்த காவல்துறையினர் இந்த கார் திருடப் பட்டது என்று கூறி விக்னேஷிடம் இருந்து எடுத்துச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த விக்னேஷ் தான் கார் வாங்கிய மதன்ராஜை தொடர்பு கொண்டு விபரத்தை கூறி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். இதைக் கேட்டு மதன்ராஜ் அதிர்ச்சி அடைந்து, அன்புச்செல்வனை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் ராஜ தானியில் கார் வாங்குவதற்கு பணம் கொடுத்த முருகன், ஆனந்தை தொடர்பு கொள்ள முயன்றார். பலமுறை முயன்றும் இவர்களை தொடர்பு கொள்ள முடியாத தால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் மதன்ராஜ் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், காரை விற்பனை செய்த அன்புச் செல்வன் அவருக்கு உதவிய முருகன், ஆனந்தன், மாரிமுத்து. முத்துப்பாண்டி. வேல்முருகன் ஆகிய 6 பேர் கொண்ட கும் பலை கைது செய்தனர்.