சிஐடியுவில் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட நிர்வாகிகள் பிச்சைக்கனி, சந்தனம் தலைமை தாங்கினர். ஜேசிடியு கன்வீனர் மரிய டேவிட் வரவேற்றார். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. என். தேவா மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் உயிர்காத்தான் , மாவட்ட தலைவர் முருகன் ,திருமலை, ராஜாராம், முனீஸ்வரன், செல்வராணி , சாந்தி, அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.