மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குரு வேல் கொடியேற்றி வைத்தார் . முதுகுளத்தூரில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று அனைத்து கிளைகளிலும் கொடியேற்றப்பட்டது.
இராமநாதபுரம், மே 2- இராமநாதபுரம் மாவட்டத்தில் சிபிஎம், சிஐடியு சார்பில் மே தின கொடியேற்றம் மற்றும் பேரணி நடைபெற்றது. இராமநாதபுரத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் ஊர்வலமாகச் சென்று நகரின் பல்வேறு பகுதி களில் கொடியேற்றப்பட்டது.வாலி நோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் மே தினக் கொடியை சங்கத்தின் தலைவர் கே பச்சமால் ஏற்றி வைத்தார். செயலாளர் குமார வடி வேலு உள்பட நிர்வாகிகள் பங் கேற்றனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் 10 மையங்களில் கொடியேற்றப்பட் டது. மாநில துணைத் தலைவர் ஆர். குருவேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இராமேஸ்வரத்தில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக் கூட்டம் மாவட்டக்குழு உறுப்பி னர் ஈ .ஜஸ்டின் தலைமையில் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செய லாளர் வி.காசிநாத துரை ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கருணா கரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா மாவட்டக்குழு உறுப்பினர் ஆரோக்கிய நிர்மலா ஆகியோர் பேசினர். சிஐடியு, ஏஐடியுசி சார்பாக இராமநாதபுரத்தில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் அரண் மனை முன்பாக நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. சந்தானம்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.பி. ராதா தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் சிவாஜி, மாவட்ட பொருளாளர் ஆர்.முத்து விஜயன் , ஏஐடியுசி மாவட்ட செய லாளர் என்.எஸ். பெருமாள் ஆகி யோர் உரையாற்றினர். முன்ன தாக வழிவிடு முருகன் கோவிலில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.