districts

img

பாலியல் வன்கொடுமைகள் குறித்து பொது விசாரணை நடத்துக!

திண்டுக்கல், டிச.24- சிறுமிகள் பாலியல் வன் கொடுமை வழக்குகளில் நீதி வழங்க வேண்டும். பொது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் லில் இருந்து கோட்டை நோக்கி நடைபயணம் சென்று முதல்வ ரைச் சந்தித்து வலியுறுத்த உள்ள தாக  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒரு வரும் திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான கே.பாலபாரதி தெரி வித்துள்ளார்.  பாச்சலூர் சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டார். கடந்த பத்து நாட்களாக குற்ற வாளிகளை கைது செய்யாத நிலை உள்ளது. இதையடுத்து மாதர் சங்கத்தின் கோரிக்கை யை ஏற்று அரசு இந்த வழக்கை சி;.பி.சிஐடிக்கு மாறுதல் செய்துள்ளது.  இந்த நிலையில் குற்றவா ளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியு றுத்தி வெள்ளியன்று கே.பால பாரதி தலைமையில் மாதர் சங்கம், விடியல் பெண்கள் கூட்ட மைப்பு சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட கே.பாலபாரதி கூறும்  போது,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் சிறுமி கள் மீதான பாலியல் வன்கொ டுமைகள் தொடர்பாக சுமார் 500 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இருபது வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 187 வழக்குகளில் குற்றவாளிகள் தப்பி உள்ளனர். பல வழக்கு கள் இன்னும் கிடப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் பிற மாவட்டங்க ளைக் காட்டிலும் திண்டுக்கல்லில் அதிகளவில் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழக அரசு திண்டுக்கல்லில் பணியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்டு பகிரங்கமாக பொது விசாரணை நடத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்ட பெண்க ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி மாத இறுதியில் திண்டுக்கல்லில்  இருந்து கோட்டை நோக்கி  நடைபயணம் மேற்கொண்டு முதல்வரை சந்தி த்து மனுக்கொடுத்து பொது விசாரணை நடத்த வலியுறுத்தப் படும் என்றார். இந்நிகழ்ச்சியில் விடியல் பெண்கள் கூட்டமைப்பின் மாவட்டத்தலைவர் டாக்டர் அமலாதேவி, பேராசிரியர் வெண்ணிலா,  அருட்தந்தை பிலிப் சுதாகர், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராணி, ஜானகி, வனஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.