சின்னாளபட்டி, மார்ச் 26- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகழ்நிலைப் பல்க லைக்கழகக் கணிதத்துறை சார்பில் எண்முறை சகாப் தத்தின் தனித்துவமான கணிதம் மற்றும் கணித மாதிரி யாக்கம் குறித்த சர்வதேச மாநாடு பல்நோக்கு அரங்கத்தில் நடைபெற்றது. கணிதத்துறைத் தலைவர் ஆர் உதயகுமார் வர வேற்றார். முனைவர் குருநாதன் ரத்தினவேலு தொடக்க உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பி.ஆர். சிவக்குமார், முனைவர் பாலசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினர். முனைவர் ஜி மகாதேவன் நன்றி கூறினார். மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14 வல்லு னர்கள் உரைகளுடன் சுமார் 180 பங்கேற்பாளர்கள் பங் கேற்று தங்களது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை முன் வைத்தனர்.