மதுரை, மார்ச் 2- சுதந்திர போராட்ட வீராங்கனையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் ஸ்தாபக தலைவருமான கே.பி.ஜானகி அம்மாள் அவர்களின் நினைவு தினமான மார்ச் 1 புதனன்று மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத்தில் சார்பில் கே.பி.ஜானகி அம்மாள் இலவச டியூஷன் சென்டர் துவக்க விழா செல்லமபட்டி ஒன்றியம் கருகபிள்ளை கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் க.பிரேமலதா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சி. மலர்விழி வரவற்று பேசினார். நிகழ்ச்சி யினை துவக்கி வைத்து அகில இந்திய துணைத் தலைவரும் கே.பி.ஜானகி யம்மாள் அறக்கட்டளையின் நிறுவனரு மான சுதாசுந்தர்ராமன் பேசினார். சங் கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநிலத் துணைத் தலைவர் மல்லிகா, மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், மாவட்டத் துணைச் செயலாளர் செ. முத்துராணி, உழைக்கும் பெண்கள் துணைக் (ஜீவிகா) குழுவின் நிர்வாகிகள் சித்ரா, விஜயா, அருணா, மற்றும் ஜானகி யம்மாள் அறக்கட்டளையின் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் சுமதி, மகாலெட்சுமி, பாண்டி யம்மாள், நிர்வாகிகள் எழில் அமுதா, அமிர்த வள்ளி உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.