districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாதர் சங்கம் பிரச்சாரம்

மதுரை, செப்.16-  ஒன்றிய மோடி அரசின் சமை யல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு,  அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் மீது  ஜிஎஸ்டி விதிப்பு என மக்களின்  வாழ்வாதாரத்தை பாதிக்கும் நட வடிக்கைகள், பெண்கள் மீதான பாலியல் விரோத போக்கை கண் டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சார நடை பயணத்தில், மத்தியக்குழு உறுப்பி னர் ஆர்.சசிகலா, மாவட்டத் தலை வர் ஆர்.லதா, மாவட்டச் செயலா ளர் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள், பொருளாளர் பா.சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல், ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு தேம்பாவணி மருத்துவ மனை அருகில் உள்ள கார்க்கி  படிப்பகத்தில் துவங்கிய நடை பயணம் செல்லூர், மீனாட்சிபுரம், புதூர் முனிச்சாலை, வில்லாபுரம், ஜெய்ஹிந்திபுரம், பழங்காநத்தம் வழியாக பெத்தானியபுரத்தில் நிறைவடைந்தது.  இதில் பகுதிக் குழு செயலாளர்  கள் ஆர்.ஜெயா, பா.பழனியம் மாள், உமாதேவி, புவனேஸ்வரி, என்.கல்பனா, தனபாக்கியம், விமலா, மல்லிகா, காசுபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் க.பாலமுரு கன், பொருளாளர் எஸ்.வேல் தேவா, தமுஎகச மாவட்டச் செயலா ளர் இளங்கோவன் கார்மேகம் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வா நிறைவுரையாற்றினார்.  சிவகங்கை சிவகங்கை அம்பேத்கர் சிலை யில் தொடங்கி சிவகங்கை நகர் முழுவதும் நோட்டீஸ் விநியோகம் செய்து பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, மாவட்டச் செயலாளர் சாந்தி,  மாவட்டத் தலைவர் பாக்கியலெட் சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.