மதுரை ஜூலை 28- மணிப்பூரில் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்தும் அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெண்களை நிர்வா ணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில பாஜக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம்,வாலிபர்,மாணவர், மாதர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தின. மதுரை புறநகர் சமயநல்லூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் என ஆகிய அமைப்புகள் இணைந்து ஊர்வலம் நடத்தின. பின்னர் நடைபெற்ற கண்ட னக்கூட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் க.பிரேமலதா தலைமை வகித்தார்.
வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் க.தமிழரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க.பிருந்தா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை புறநகர் ஒருங்கிணைப்பாளர் வீ.உமாமகேஸ்வ ரன், ஆர்.சி.திருசபை அருட்தந்தை ராபின்சென், அருட் சகோதரி கில்டா, பழங்குடி மக்கள் கூட்டமைப்பு ஏ.கே.பி.மணி, ஜமாத் தலைவர் பத்ரி சுமால், ஆகியோர் உரையாற்றினர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் நிறைவுரை யாற்றினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.மலர்விழி நன்றி கூறினார். 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மதுரை புறநகர் திருநகர் 2வது பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டததிற்கு சிஐடியு தெற்கு தாலுகாச் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாண்டி தலைமை வகித்தார். துவக்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோ வன் பேசினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.காசி, மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வ ரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்ப்பாண்டி, சிபிஎம் மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டள உரையாற்றினார்கள். சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் நிறைவுரையாற்றினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா குழு செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், மாதர் சங்கமாவட்டச் செயலாளர் சாந்தி ,மாவட்டத் தலைவர் பாக்கியலட்சுமி ,மாவட்ட பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் பேசினர்.
தேனி
கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட் டத்திற்கு தேனி மாவட்ட ஊழியர் ஐக்கிய தலைவர் தீமோத்தேயு தலைமை தாங்கினார். தேனி புதுபள்ளிவாசல் ஜமாத் தலைவர் சர்புதீன், அல்லிநகரம் ஜமாத் தலைவர் மல்கர் ஒலி, தேனி வட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் அபுதாஹீர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது சபி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். சம்பட்டி நாகராஜன் ஒருங்கிணைத்தார் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன் ,சி.முருகன் ,சி.முனீஸ்வரன் ,மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்
இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டியன் நகரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு விருதுநகர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சரவணன் தலைமையேற்றார். எட்வர்ட் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், திமுக மாவட்ட பிரதிநிதி இசக்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புஷ்பராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் இதில், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி,பாலகிருஷ்ணசாமி, நகரத் தலைவர் நாகேந்திரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.