districts

மார்க்சிஸ்ட் கட்சியினரை தாக்கிய அதிமுகவினரை கைது செய்திடுக!

இராமநாதபுரம்,ஜன.31- இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மீது அரசியல் உள்நோக்கத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுகவினரை கைது செய்ய வேண்டும். இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்  தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முதுகுளத்  தூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் தாலுகா செயலாளர் வி.  முருகன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் வி. காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். கலையரசன், வி.மயில்  வாகனன், பரமக்குடி தாலுகா செயலாளர் டி.ராஜா, விவ சாயத் தொழிலாளர் சங்க  மாவட்ட செயலாளர் கே கணேசன், வழக்கறிஞர் எஸ். சந்திரசேகரன், சிபிஐ மாவட்ட நிர்வாகி ஜெயசீலன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி ராவுத்தர் ஆகியோர் பேசி னர்.  சிபிஎம் மாவட்ட செயலா ளர் வி.காசிநாததுரை பேசு கையில், சிபிஎம் நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல் நடத்  திய அதிமுகவினரை காவல் துறை கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட சிபிஎம் நிர்  வாகிகள் மீது எதிர் தரப்பிலி ருந்து புகார் மனு பெற்றுக்  கொண்டு வழக்கு பதிவு  செய்துள்ளனர். காவல் துறை டிஎஸ்பி யின் இந்த நட வடிக்கை கண்டனத்துக்குரி யது. இதில் அதிமுக எம்.பி. யின் தலையீடு இருப்பதாக தெரியவருகிறது. இதுதொடர் பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.முத்துராமு, இ. கண்ணகி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.