districts

img

சாலைகள் சீரமைப்புக்கு உடனே நிதி ஒதுக்கிடுக!

மதுரை, டிச.28-  மதுரை மாநகராட்சி பகுதியில் சேத மடைந்துள்ள அனைத்து சாலைகளை யும் உடனடியாக சீர்படுத்திட வேண் டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுத்து - சுத்தமான குடிநீர் வழங்கிட வேண்டும். மதுரை மாநகராட்சியின் நிதி நிலை குறித்து வெள்ளைய றிக்கை வெளியிட வேண்டும். மாநக ராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தமிழக அரசு ரூ.500 கோடி நிதி வழங்கிட வேண் டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மாநகர் முனிச்சாலை கிழக்கு மண்டல அலுவலகம் அருகில் செவ் வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு பகு திக்குழு செயலாளர் ஜெ.லெனின் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் அ.ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் மா.கணேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் கண் டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நர சிம்மன், இரா.லெனின், ம.பால சுப்பிரமணியம், வை.ஸ்டாலின், ஆர். சசிகலா, எஸ்.அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், மதுரை மாநகர் என்பது பல்வேறு சுற்று லாத் தலங்களை கொண்ட பகுதியாக உள்ளது. ஆனால் வருகின்ற பொது மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி கள் போதிய அளவில் இல்லாத நிலை தான் உள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்தினால் மாநக ராட்சிக்கு நிதி ஆதாரம் பெருக வாய்ப் புள்ளது. தனியார் பள்ளி நிறுவ னங்கள், தொழில் நிறுவனங்கள் என்று பலரும் வரி பாக்கி வைத்துள்ள நிலையில் அதை உடனடியாக வசூ லிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

தாகூர் நகரில் பிரச்சாரக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 1 ஆம் பகு திக்குழு சார்பில் திங்களன்று செல்லூர் தாகூர்நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக்கூட்டத்திற்கு கிளைச் செய லாளர் கே.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் வி. பழனி, ஜி.பாலு முன்னிலை வகித்த னர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பகுதிக்குழுச் செயலாளர் வி.கோட் டைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் டி.குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் க.திலகர், பா.பழனி யம்மாள், பகுதிக்குழு உறுப்பினர் டி. ஆறுமுகபெருமாள் ஆகியோர் பேசி னர். கருப்பசாமி நன்றி கூறினார்.