districts

img

திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் பழனி 15-ஆவது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.கந்தசாமி வெற்றி பெற்றார். நகர்மன்ற உறுப்பினராக இவர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பேரூராட்சி 13-ஆவது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.ரவிகுமாரை மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் வி.முருகன், கமுதி தாலுகா செயலாளர் கே.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முத்துவிஜயன் மற்றும் கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.