திண்டுக்கல், ஜுன்.14- திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதி யில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று கூறி குடியிருப்புகளை இடிக்க பொக்லைனுடன் வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முயற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் கிராம மக்களின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. தாடிக்கொம்பு பேரூராட்சியில் திருமஞ்சன வீதி என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதி தாடிக்கொம்பு சௌந்திரராஜ பெருமாள் கோவி லுக்குச் சொந்தமான நிலம் என்று கூறிக்கொண்டும், ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்றும் புதன்கிழமை யன்று பொக்லைன் இயந்திரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அதி காரிகள் அப்பகுதியில் உள்ள வீடு களை இடிக்க வந்தனர். . இதனை அறிந்த திருமஞ்சன வீதி மக்கள் நூற் றுக்கும் மேற்பட்ட திரண்டு சாலை மறி யலில் ஈடுபட முயன்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செய லாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், கிளைச்செயலாளர் முத்துக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றி யச்செயலாளர் ராஜேந்திரன் ஆகி யோர் அங்கு விரைந்தனர்.
இதனைய டுத்து தாடிக்கொம்பு காவல்துறை அதி காரிகளும் அங்கு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், திருமஞ்சன வீதி மக்களுடன் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வீடுகளை இடிக்க வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். குடியிருப்பவர்களை அகற்றும் முயற்சிக்கு சிபிஎம் கண்டனம் கடந்த 70 ஆண்டுகளாக தாடிக் கொம்பு பகுதியில் உள்ள திருமஞ்சன வீதியில் குடியிருப்பவர்களின் வீடு களை இடிக்கும் முயற்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் ஒன்றி யச்செயலாளர் சரத்குமார் கூறுகை யில், திருமஞ்சன வீதி மக்கள் மிக வும் ஏழ்மை நிலையில் அன்றாட கூலி களாக உள்ளனர். இந்த ஊரில் 70 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களை இந்த நிலங்களிலிருந்தும், அவர்களது வீடுகளிலிருந்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தக் கூடாது. சௌந்திர ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்த மான நிலம் என்பது உறுதிப்படுத்தப் பட்டால் இம்மக்களிடம் சிறிய தொகை யை வாடகையாக விதித்து வசூலிக்க வேண்டும். மேலும் இம்மக்கள் அந்த பகுதியில் தொடர்ந்து குடியிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.