மதுரை, நவ.19- இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மதுரை இரட்டை தியாகிகள் மாரி - மணவா ளன் 73 வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நவம்பர் 19 சனிக்கிழமையன்று நேதாஜி மெயின் ரோடு, பி.பி.குளம் அருகில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு தலைமை வகித்தார். மூத்த தோழர் வன்னி யன் கொடியேற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் -மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி. ராதா, கே. அலாவுதீன் , எஸ். வேல்தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். எஸ். முருகன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் எம். நந்தா சிங் ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர். பகுதிக்குழு உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார். சிஐடியு, ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாற்றுத்திறனாளி கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் சார்பில் பலரும் தோழர்கள் மாரி - மண வாளன் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணி வித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி னர்.