தூத்துக்குடி, பிப்.18- தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் ஒருங்கி ணைந்த பண்ணடுக்கு கடல்சார் நீருயிரி வளர்ப்பு (IMTA) தொழில்நுட்பம் குறித்து இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல் கலைக் கழகத்தின் ஓர் அங்க மான கடல்சார் உயிரின வளர் ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி தருவைக்குளத்தில் ‘‘ஒருங்கிணைந்த பன்னடு க்கு கடல்சார் நீருயிரி வளர் ப்பு’’ குறித்த இரண்டு நாள் பயிற்சி தருவைக்குளத்தில் உள்ள மீனவ சமுதாய மக்க ளுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியானது தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியுடன் நடைபெற்றது. இதில், தருவைக்குள ஊராட்சியை சார்ந்த 11 பெண்கள் உட்பட மீனவ மக்கள் 20 நபர்கள் பயிற்சி பெற்று பயனடைந்த னர். நிறைவுவிழாவில், உத விப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) விஜய் அமிர்தராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுஜாத் குமார் தலைமை உரை யாற்றினார். மேலும் இப்பயிற்சிக்கான கையேடு மற்றும் மடிப்பிதழ்களை முதல்வர் வெளியிட முதல் பிரதியினை பஞ்சாயத்து தலைவி காடோடி பெற்றுக் கொண்டார். மேலும், பயிற்சி யாளர்களுக்கான சான்றி தழ்களையும் வழங்கினார். திட்ட உதவியாளர் மரிய சகாய கிறிஸ்டிகா நன்றி கூறி னார்.