பழனி நகர பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ஆணைகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார். ஆணையை பெற்று கொண்டவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகர்மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.