districts

img

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மானாமதுரை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் காரைக்குடி, மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய வட்டங்களில் மொத்தம் ரூ.23.74 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களை ஏப்ரல் 25 அன்று காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, காரைக்குடி வட்டம், பள்ளத்தூர் பேரூராட்சிப் பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .ப.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார்.   மண்டல மேலாளர்  அருண்பிரசாத், பேரூராட்சித் தலைவர்கள் சாந்தி சங்கர் (பள்ளத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்), எம்.முகமுது மீரா (புதுவயல்), மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.