மதுரை, ஜன.23- பல்சமய உரையாடல் பணிக்குழு, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு, மதுரை திருவருட்பேரவை, கிறிஸ்தவ ஒன்றிப்பு, சதங்கை கலைத் தொடர்பு மையம் அமைப்புகள் சார் பில் மாமதுரை மக்கள் ஒற் றுமை பொங்கல் விழா ஞாயி றன்று மதுரை பெத்தானியா புரத்தில் நடைபெற்றது இதில் அனைத்து மதத்தைச் சேர்ந் தவரும் பொங்கல் வைத்து மக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து இசை முழக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வில் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோனி பாப்புசாமி, சிஎஸ்ஐ பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மேயர் இந்தி ராணி, துணைமேயர் டி.நாக ராஜன், சாந்தி குமார சுவாமி கள், சித்தர் சிங்காரவேலு, மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ. லியாகத் அலி, ராஜ யோக மையம் உமா பிரம்ம குமாரிகள், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாநகர் மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், செயலா ளர் என்.கணேசமூர்த்தி உள் ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.