மதுரை புறநகர் மாவட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 20 ஆயிரம் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் வழங்கப்பட்டது. உடன் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், சுமைப்பணி புறநகர் மாவட்டச் செயலாளர் பி.பொன்ராஜ், கிளை நிர்வாகிகள் வேல்முருகன், ஆறுமுகம், சசிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.