districts

மதுரை புறநகர் சிபிஎம் வேட்பாளர்கள் மனு ஏற்பு

மதுரை, பிப்.5- நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமையன்று நடைபெற் றது. இதில், மதுரை புறநகர் பகுதி யான சோழவந்தான் பேரூராட்சி யில் மொத்தம் 18 வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்த 98 மனுக்களும் ஏற்கப்பட்டன.  திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கு 146 மனு பரி சீலிக்கப்பட்டு, அனைத்து மனுக் களும் ஏற்கப்பட்டன. டி.கல்லுப் பட்டி பேரூராட்சியில் 15 வார்டு களுக்கு 77 மனுக்கள் தாக்கல் செய்து அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பரவை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 86 மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டு, அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. பேரையூர் பேரூராட்சி யில் 15 வார்டுகளுக்கு 98 வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 91 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருமங்கலம் நகராட்சி 14வது வேட்பாளர் க.பாண்டிச்செல்வி, பரவை பேரூராட்சி 14வது வார்டு வேட்பாளர் எஸ்.மகாலிங்கம், சோழவந்தான் பேரூராட்சி 12வது வார்டு வேட்பாளர் ஆர்.சுஜாதா, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 4வது வார்டு வேட்பாளர் எம்.செல்வி ஆகியோரது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.