districts

img

தனியார்மயத்தைக் கைவிட மதுரை மாநகராட்சித் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

மதுரை, செப்.20-  மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அனைத்து பணிகளையும் தனியார் மூல மாக செயல்படுத்த நினைக்கும் அரசாணை யை ரத்துச் செய்ய வேண்டுமென மதுரை  மாநகராட்சித் தொழிலாளர் (சிஐடியு) சங் கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 55-ஆம் ஆண்டுப் பேரவை  மதுரையில் மாவட்டத் தலைவர் கே.  மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற் றது. செயல் தலைவர் எஸ்.விஜயன் சிஐடியு கொடியை ஏற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் பி.சீதாலட்சுமி தீர்மானங்களை முன்மொழிந்தார், பேரவையை  சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ் துவக்கி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜி.ரவி வரவேற்றார். ‘ பொதுச்செயலாளர் ம.பாலசுப்பிர மணியன் வேலையறிக்கையையும், பொரு ளாளர் கே.கருப்பசாமி வரவு-செலவு அறிக்  கையையும் சமர்ப்பித்தனர்.  மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.  நாகராஜன், கட்டுமான சங்க பொதுச்செய லாளர் சி.சுப்பையா ஆகியோர் வாழ்த்தி னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின் நிறைவுரையாற்றினார்கள். ஏ.சரவணன் நன்றி கூறினார். இந்தப் பேரவையில் மதுரை மாநக ராட்சியில் அனைத்துப் பிரிவு தொழிலா ளர்களுக்கும் ஓய்வறை, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். அலுவலகங்கள் இல்லாத வார்டுகளில் அலுவலகங்கள் கட்டித் தர வேண்டும். மதுரை மாநகராட்சியின் பணிபுரியும் தூய்மைக் காவலர்களுக்கு தினச் சம்பளம் ரூ. 725 மற்றும் டிபிசி பணியாளர்களுக்கு தினச் சம்பளமாக ரூ.550 வழங்க வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைந்த நிரந்தர தூய்மை பணியாளர்களின் வாரிசு களுக்கு 2023- வரை விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்துச் செய்து மாநக ராட்சி நிர்வாகமே அனைத்துப் பணிகளை யும் ஏற்று நடத்த வேண்டும்.  மாநகராட்சி- நகராட்சிகளில் அனைத் துப் பணிகளையும் தனியார் மூலமாக செயல்படுத்த நினைக்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர் களை காலம் முறை ஊதியத்தில் கொண்டு  வர வேண்டும். தினக்கூலி தூய்மைத் தொழி லாளர்கள் மற்றும் தினக்கூலி வாகன ஓட்டு னர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தை உடனடி யாக திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  பேரவையில், செயல் தலைவராக முரு கன், தலைவராக கே.மீனாட்சிசுந்தரம், பொதுச்செயலாளராக ம.பாலசுப்பிர மணியம், பொருளாளராக கே. கருப்ப சாமி உட்பட 18 நிர்வாகிகள் 45 நிர்வா கக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.