districts

img

தார் சாலை பணிகள் குறித்து மதுரை மேயர் ஆய்வு

மதுரை, அக்.12- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.43  முனிச்சாலை மெயின் சாலை யில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் தார் சாலை பணி களை மேயர் இந்திராணி பொன்வசந்த் வியாழனன்று ஆய்வு செய்தார்.  மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்  பணிகளான புதிய சாலை கள், மழைநீர் வடிகால்கள், பள்ளி கூடுதல் வகுப்பறை கள், அங்கன்வாடி மையங் கள், சத்துணவு கூடங்கள், நல வாழ்வு மையங்கள், நகர்ப்  புற சுகாதார மையங்களில் கூடுதல் கட்டிடங்கள், சமு தாய கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்  கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.43  முனிச்சாலை மெயின் சாலை, இஸ்மாயில்புரம் 12-ஆவது தெரு முதல் காம ராஜர் சாலை வரை உள்ளிட்ட பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் பழைய தார் சாலை கள் அகற்றப்பட்டு 15-ஆவது  மத்திய நிதி திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 270  மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலம்  கொண்ட புதிதாக தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தின் கீழ்  சாலைகள் அமைக்கப்படு வதால் சாலையின் இருபுற மும் தூசிகள் படியாதபடி சாலை அமைத்து நகரத்  தின் தூசிப்படாத அளவிற்கு இந்த சாலை அமைக்கப்படு கிறது. தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணி யினை மேயர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார்.  ஆய்வின்போது துணை மேயர் தி.நாகராஜன், தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன், மண்டலத் தலைவர்  முகேஷ்சர்மா, கண்கா ணிப்பு பொறியாளர் அரசு,  மக்கள் தொடர்பு அலுவலர்  மகேஸ்வரன், உதவி செயற்  பொறியாளர் மயிலேறி நாதன், உதவிப் பொறியா ளர் சந்தனம், சுகாதார அலு வலர் கோபால் உட்பட மாநக ராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.