மதுரை, ஜூலை 12- மதுரை மாநகராட்சி மண்டலம் 1 ஆனையூர், கூடல்புதூர், கோசாகுளம் மற்றும் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மேயர் வ. இந்திராணி பொன்வசந்த் , ஆணையா ளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் ஜூலை 12 அன்று ஆய்வு மேற்கொண்டனர். வார்டு எண்.12 புதூர் வீரகாளி யம்மன் கோவில் காந்திபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற் பட்டு சாலையில் நீர்; தேங்கியுள்ளதை மேயர் பார்வையிட்டு அதனை விரை வில் சரிசெய்திட சம்பந்தப்பட்ட அலு வலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, நகரப்பொறியாளர் லெட்சும ணன், செயற்பொறியாளர் ரவிச்சந்தி ரன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாந கராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.