மதுரை, மார்ச் 10- நாட்டின் சுதந்திரத்திற் காகப் போராடிய கம்யூ னிஸ்ட்டுகள், அவர்கள் செய்த தியாகங்களை இந்தச் சமூகம் மறந்து விடக்கூடாது. சுதந்திரப் போராட்டத்தில் கே.பி.ஜானகியம்மாள் தென்னிந் தியா முழுவதும் அறியப் பட்ட போராளி. நாடகக் கலை மூலம் சுதந்திர வேட்கை யை ஊட்டியவர். தோழர் என்.சங்கரய்யாவும் சுதந்தி ரத்திற்கான போராட்டத்தில் பங்கேற்று வாழும் வர லறாய் நம் முன் நிற்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள்-அதன் விழுமியங்களை அறி யாத கூட்டம் நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறது என்றார் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன். மதுரை விளாங்குடியில் மார்ச் 3 அன்று மாலை நடை பெற்ற கே.பி.ஜானகி யம்மாள் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “சுதந்திர இந்தியாவில் அனைத்து பொதுத்துறை களும் விற்கப்படுகின்றன. பிரதமர் மோடி அதானிக் காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கி றார். அதானிக்கு ஆதர வாக கார்ப்பரேட் ஊடகங்க ளும் ஒத்து ஊதுகின்றன. கேஸ் விலை ரூ.50 உயர்த் தப்பட்டுள்ளது. இது கந்து வட்டியை விடக் கொடூர மானது. இதைப் பற்றி கார்ப்பரேட் ஊடகங்க ளுக்கோ, மோடிக்கோ கவ லையில்லை. அதானியை நினைத்துத்தான் கவலைப் படுகிறார்கள். அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஒரு குழந் தையின் காய்கறி தேவைக் காக வெறும் 80 பைசா ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 20 பைசா அதிகரித்து 1 ரூபா யாகவாவது உயர்த்துங்கள் என நாடாளுமன்றத்தில் போராடுகிறோம். அங்கன் ்வாடி குழந்தைகளின் மீது கூட கருணையில்லாத மோடி அரசு அதானியின் ரூ.8,000 கோடி (ஒரு சிறு நிறு வனத்தில் மட்டும்)கடனை தள்ளுபடி செய்கிறது. மேலும் மேலும் கடனை வாரி வழங்குகிறது. தமிழகத்தில் 17 ஆயி ரம் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள் ளன. கழுத்தை நெரிக்கும் அளவிற்கு ஜிஎஸ்டி விதிக் கப்படுகிறது. மூடப்பட்ட தொழில் நிறுவனங்களைப் பற்றியோ, அதில் பணி யாற்றிய தொழிலாளர்க ளைப் பற்றியோ மோடிக்கு கவலையில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை வழங்க மறுக்கிறது. இதற்குக் கார ணம் தமிழகத்திற்கு எந்தத் திட்டமும் வந்து விடக் கூடாது. வஞ்சிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம். நாடு முழுவதும் சிபி எஸ்இ தேர்வுகள் நடை பெறுகிறது. முதல் பாடம் ஆங்கிலம். ஆங்கிலம் தேவையில்லையெனில் இந்தியில் எழுதலாம். இது உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களின் நிலை. ஆனால், தமிழகத்தில் ஆங்கி லம் தேவையில்லையெனில் தமிழ் பாடம் கிடையாது. இந்தியில் தான் எழுத வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு நீட் தேர்வு மையம் ஆந்திர மாநி லம் கடப்பாவில் ஒதுக்கப் பட்டுள்ளது. நீட் தேர்வே தேவையில்லை என்பது தான் நமது நிலைபாடு. ஆனால், தேர்வு மைய ஒதுக் கீட்டில் கூட தமிழக மாண வர்கள் ஒரவஞ்சனையுடன் நடத்தப்படுகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் வளர்ச்சி, வர லாறு, மரபு குறித்து கவ லைப்படுவதில்லை. திரு வள்ளுவராண்டைக் கூட ஏற்க மறுக்கிறார். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி கள் ஒன்றிய அரசு சொல்வ தைக் கேட்க வேண்டுமென போதிக்கிறார். அதிகாரிகள் சட்டப்படி செயல்படுங்கள் எனக் கூறுவதற்குப் பதில் ஒன்றிய அரசு சொல்வதைக் கேட்க வேண்டுமெனக் கூறுவது விதி மீறல். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்க் கும் வலிமையான மாநிலம் தமிழகம் என்பதை நிரூபிப் போம். பாஜக-விற்கான கருத்தியல் போராட்டத்தை ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு சேர்ப்போம்“ என்று கூறினார். நிகழ்வில் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்டக்குழு உறுப் பினர்கள் பாலகிருஷ்ணன், மலர்விழி ஆகியோர் பேசி னர். கூட்டத்திற்கு லெனின் ரவீந்திரன் தலைமை வகித்தார்.