மதுரை, ஜூன் 23- மதுரை மாநகராட்சிக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் ஜூன் 23 அன்று நடைபெற்றது. துணை மேயர் தி.நாகராஜ், ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரதான பிரச்சனைகளை எடுத் துக்கூறினர். கடந்த ஐந்து மாதங்களில் மாநகராட்சியில் அடிப்படை வசதி களான பாதாளச் சாக்கடை, குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற எந்தத் திட்டமும் ஒழுங்குமுறையில் செயல் படுத்தவில்லை என்று கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராமன் பேசுகையில், எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆட்சி காலத்தில் வரி கட்டவில்லை என்று குப்பை தொட்டியை கொண்டு வைத்துவிட்டு சென்று விட்டார்கள். பின்னர் 2 மாதத்திற்கு உரிய வரி யினை கட்டி பின்னர் குப்பை தொட்டி யினை எடுத்தார்கள். ஆனால் தற்போது எனக்கு தெரிந்த தகவலில் கரிமேடு காவல்நிலையம் சார்பில் பல ஆண்டு களாக வரி கட்டாமல் சுமார் 44 லட்சம் ரூபாய் வரி பாக்கி உள்ளது. ஆரப்பாளை யம் பேருந்து நிலையத்தில் உள்ள கடை களுக்கு சாதாரண வாடகையாக ரூ. 180 முதல் 200 வரை தற்போது இஷ்டம் போல் வாங்கி அவரவர் பையில் வைத்து செல்கிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை புதிய கட்டமைப்புடன் ஒழுங்குபடுத்தி வாடகை நிர்ணயம் செய்து வாடகை வசூல் செய்தால் மாநகராட்சிக்கு வரு மானம். அதிகமாக பட்டியலின மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் சமுதாய கூடத்தினை மராமத்து செய்தால் அந்த பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார். பேசுவதற்கு அனுமதி வழங்க வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தங்களது அதிருப்தி யை வெளிப்படுத்தினர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், எம்.விஜயா, வை.ஜென்னியம்மாள் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இந்த மாமன்ற கூட்டத்தில் பேசுவதற்காக (புதனன்று) வாய்ப்பு கேட்டு மனு அளித்திருந்தும், அதனை பொருட்படுத்தாமல் மதுரை மாநகராட்சி மேயர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கூட்டம் முடி வற்றதாக அறிவித்தார். ஆளும் கட்சி யின் மாமன்ற உறுப்பினர்கள் அதிகமான வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள் ளது. இன்றைய அஜண்டாவில் நாளா வது எண்ணில் மதுரை மாநகராட்சியின் தரைத்தளம் பிரைவேட் கம்பெனிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட உள்ளதாக கூறி அறிக்கை கொடுத்துள் ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை எதிர்க்கிறது. இத்தளத்தை வாட கைக்கு விட்டால் மாமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் கொல்லைப்புற வழியாகத்தான் வரமுடியும். சொத்து வரி உயர்வை மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகளும் எதிர்த்துள்ளன. இந்த சொத்து வரி உயர்வை வாபஸ் வாங்க வேண்டும். இன்றைக்கு மதுரை மாநக ரில் பல்வேறு நிறுவனங்கள், கம்பெனி கள், கல்லூரிகள் ஏராளமான கோடிக்க ணக்கான வரி பாக்கி வைத்துள்ளன. அது குறித்த பட்டியலை மாநகராட்சி நிர்வா கம் வெளியிட வேண்டும். அப்படி செலுத்தாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நடைமுறையை பின்பற்றுக: சிபிஎம் கோரிக்கை
மாமன்ற கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி எடுக்கப்படும். அதற்குப் பின் கட்சி தலைவர்களை பேச சொல் வார்கள். அந்த நடைமுறை என்பது தற்போது மாமன்றத்தில் இல்லை. கூட்டம் ஆரம்பித்தவுடன் மண்டல தலை வர்கள் மற்றும் குழு தலைவர்களை பேச சொல்வதும் நடைமுறை என்பது கிடை யாது. அதே போல் மாமன்ற கூட்டத்தில் வைக்கப்படும் அஜெண்டாக்களை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். அதற்குப்பின் மேயர் பதில் அளிப்பார் கள். இது எதையுமே கடைப்பிடிக்காமல் கூட்டம் முடிந்துவிட்டது என்று மேயர் சொல்லிச் செல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. கடந்த காலங்களில் திமுக இருந்தபோது இதுதான் நடைமுறை. எனவே வரும் காலங்களில் மாமன்ற உறுப்பினர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகும் என்று தெரிவித்துள் ளனர்.