மதுரை, செப்.5- மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி யில் “ஆசிரியர் தினவிழா” கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை வகித் தார். தொடர்ந்து அவர், “மாணவர்களுக்குக் கல்வி, நல்லொழுக்கம், தன்னம் பிக்கை, தன்னார்வத் தொண் டுகள் பற்றி எடுத்துக்கூறி னார். சிறப்பு விருந்தி னர்களாகத் தமிழியக்க மதுரை மாவட்டச் செயலா ளர் பழனிச்சாமி, வழக்கறி ஞர் சல்மான்கான், சுல்தான் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஆசிரி யர்களுக்கு நினைவுப் பரி சாக நூல்களை வழங்கி சிறப்புச் செய்தனர். மாண வர்கள் அப்துல் ரஹ்மான், கோகுல்ராஜ், ராஜ ஹரிகரன் ஆகியோர் தலைமையாசி ரியர்- ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர். இந்நிகழ் வில் உதவித்தலைமை யாசிரியர்கள் ஜாகிர் உசேன் மற்றும் ரஹ்மத்துல்லா கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள்-அலுவலர்கள் செய்திருந்தனர்.