பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோட்டில் பொங்கல் மண் பானைகள் வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வர்ணம் பூசப்படாத மண்பானை விலை ரூ. 50 முதல் ரூ 300 வரையும் வர்ணம் பூசப்பட்ட ஒரு பானையின் விலை ரூ. 100 முதல் ரூ. 400 மற்றும் ரூ. 500 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறினர். இரண்டு தினங்களாக கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைப்பதற்காக பானைகளை வாங்கிச் சென்றார்கள் என்றும் சனிக்கிழமையன்று விற்பனை சற்று அதிகரிக்கும் என்றும் கடை விற்பனையாளர்கள் கூறினர். சிம்மக்கல் யானைக்கல் அருகில் கரும்பு மற்றும் பனங்கிழங்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.15 சிறிய பனங்கிழங்குகள், 10 பெரிய கிழங்குகள் கொண்ட கட்டு தலா நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று தெரிவித்தனர். ஒரு கரும்பின் விலை 50 ரூபாய்க்கும் ஒரு கட்டு 400 முதல் 600 ரூபாய் வரை உள்ளது என்று வியாபாரிகள் கூறினர்.