மதுரை, பிப்.15- திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் மதுரை மாநக ராட்சி 96 ஆவது வார் டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியுமான என்.விஜயா போட்டியிடுகிறார். இவர் போட்டியிடும் 96 ஆவது வார்டு திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்வி பட்டி பகுதியில் வருகிறது. இந்த பகுதி பேரூ ராட்சியாக இருந்தபோது பேரூராட்சி தலை வராக என்.விஜயா செயல்பட்டார். வேட்பாளர் என்.விஜயா கூறியதாவது: பேரூராட்சியாக இருந்த போது சுமார் 40 வருடமாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வந்த மக்களில் 26 நபர் களுக்கு பட்டா வாங்கிக் கொடுக்கப்பட்டது. ஹார்விபட்டி பூங்காவை சுற்றி சாலை மற்றும் நடைமேடை அமைத்து கொடுக் கப்பட்டது. குடிநீர் குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இப்படி மக்களுக்கான பல்வேறு திட்டங் களை செயல்படுத்தினேன். தற்போது மாந கராட்சி 96 ஆவது வார்டில் மாமன்ற உறுப்பி னர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் போட்டியிடுகிறேன். இங்கு குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை, சாலை வசதி உட்பட பல அடிப்படை பிரச்ச னைகள் உள்ளன. 13 ரூபாய் கொடுத்துத் தான் குடிநீரை வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மாநகராட்சியில் இருந்தது லாரி மூலம் கொண்டு வந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றி அதன் பின்னர் மக்களுக்கு குழாய் மூலம் தருகின்றனர். எனவே மக்களின் அத்தியா வசிய தேவையான குடிநீர் பிரச்சனையை போக்க ஆர்ஓ பிளான்ட் அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் 80 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்த ஹார்விபட்டி மேல்நிலைப் பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக மூடிக் கிடக்கி றது.மேல்நிலைப் பள்ளியை திறந்து அதனை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுப்பேன். மேலும் சாலை வசதி, தெரு விளக்கு, பாதா ளச் சாக்கடை வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பேன். ஹார்விபட்டியில் மீட்கப்பட்டுள்ள அரசு நிலத்தில் சிறுவர் பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுப்பேன். அரசு நலத்திட்டங்கள் கிடைத்திட நட வடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.