districts

img

மாநகராட்சிப் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகளை மு.பூமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்

மதுரை, ஆக.11-  மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 29 ஆவது வார்டு செல்லூர் பகுதியில் பாரதியார் மாநகராட்சி  நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக மேஜை. நாற்காலிகள் வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை யேற்ற மு.பூமிநாதன் சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் மற்றும் பீரோ உள்ளிட்டவற்றை வழங்க ரூ.3.50 லட்சம் ஒதுக்கி உத்தரவிட்டார். இதை யடுத்து மாநகராட்சிப் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று  நடைபெற்றது.  இதில் சட்டமன்ற உறுப்பினர் மு.பூமி நாதன் பங்கேற்று மேஜை, நாற்காலிக ளை பள்ளிக்கு வழங்கினார். இதில்  மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் மா.முகேஷ்சர்மா, தெற்கு மண்டல உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், மாமன்ற உறுப்பினர் லோகமணி ரஞ்சித் குமார், மதிமுக மாவட்டச் செயலர் முனிய சாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.