மதுரை,டிச.17- நாடாளுமன்றத்தின் ‘புனிதத்தைக்’ காக்கவே 13 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்குள் சிலர் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடு முழு வதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரும் ஒன்றிய அர சும் பதிலளிக்க வேண்டும் என்று கோரிய மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் உட்பட எதிர்க்கட்சிகளின் 13 எம்.பி.க்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். இந்த அராஜகத்தை கண்டித்து எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கண்டனப் போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.
சபாநாயகர் கடிதம்
இந்நிலையில், மக்களவை உறுப்பினர் களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, டிசம்பர் 14 அன்று ஒரு விரிவான கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், டிசம்பர் 13 அன்று மக்களவை யின் உள்ளே நடந்த சம்பவம் துரதிருஷ்டவச மானது என்றும், நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் இப்படி வலுப்படுத்து வது என்பது குறித்து அனைத்துக் கட்சி தலை வர்களுடன் விவாதித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அச்சம்பவத்தைத் தொடர்ந்து அவையில் சில உறுப்பினர்கள் நடந்து கொண்டது ஏற்புடையதல்ல என்றும், அதன் காரணமாக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது என்பது, முற்றிலும் அவையின் புனிதத்தை நிலைநாட்டுவதற்காகவே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல அறிவுரைகளை யும் உறுப்பினர்களுக்கு கூறி, அவையின் கண்ணியத்தை காக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி., பதில் கடிதம்
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
பெருமதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அவர்களே! வணக்கம்.
அவை உறுப்பினர்களுக்கு நீங்கள் எழுதி யுள்ள கடிதம் அதிர்ச்சியையும் வேதனையை யும் உருவாக்குவதாக உள்ளது.
“டிசம்பர் 13ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கும் அவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளீர்கள். ஒரு சபாநாயகராக நீங்கள் எடுத்த நடவடிக்கையின் நியாயத்தை விளக்க லாம். அதில் தவறில்லை. ஆனால் நாங்கள் நடத்திய போராட்டத்தின் நோக்கத்தை மறைக்க முயல்வது அபத்தமானது.
இடைநீக்கம் ஏன்?
நாங்கள் அவையில் போராடியதற்காகத் தான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். எதற் காகப் போராடினோம்? 13ஆம் தேதி நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சர் அவைக்கு விளக்க வேண்டும் என்று கேட்டோம். இந்தக் கோரிக்கை பாதுகாப்பின்மையால் சீர்குலைக்கப்பட்ட அவையின் மாண்பை கூட்டுணர்வோடு சரி செய்ய வலியுறுத்தும் செயலாகும்.
உள்துறை அமைச்சர் ஊடகச் சந்திப்பில் இதுகுறித்துப் பேசுகிறார். ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இல்லை. இந்த அரசு நாடாளுமன்றத்தை மதிக்கும் விதம் இதுதானா? நீங்கள் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கான அழுத்தத்தை தந்திருக்கலாம்.
கடந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்ச னையில் அந்த மாநிலம் பற்றியெரிந்த நேரத்தி
லும் பிரதமர் பேச மறுத்தார். அதானியின் பங்குச் சந்தை ஊழல் குறித்து ஒரு வார்த்தை பேச வில்லை. நாடாளுமன்றக் குழுவின் விசார ணைக்குக் கடைசி வரை அரசாங்கம் தயாராக இல்லை. இந்த தேசத்தின் உயர்மட்ட அரசியல் தலைமையை “தேச முக்கியத்துவம்” வாய்ந்த பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் பேச வைக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு என்னதான் வழி இருக்கிறது? நாடாளுமன்ற ஜனநாயகம் விவாத செயல்பாட்டினூடே துடிப்புமிக்கதாக மாறுகிறது. அதன் துடிப்பை நிறுத்தும் நோக்கம் கொண்டது தான் விவாதத்தை மறுப்பதென்பதும் தவிர்ப்பதென்பதும்.
அருவருக்கத்தக்க கூற்று
‘அவையின் புனிதத்தை நிலைநிறுத்து வதற்காகவே எங்களை இடைநீக்கம் செய்த தாக’ கூறியுள்ளீர்கள். இது அருவருக்கத்தக்க கூற்று. புனிதத்தைக் காக்க போடப்பட்ட சாம்பிராணிப் புகைதான் அந்த மஞ்சள் வண்ணப் புகையா சபாநாயகரே? புனிதத்தைக் காக்க பாஸ் கொடுத்தவரை இனி புனிதர் என்று அழைக்கத் தீர்மானம் கொண்டுவர லாமா? உங்களின் விசுவாசம் உண்மைக்கு எதிரானதாக அம்பலப்பட்டு நிற்கிறது.
உங்களின் கடிதத்தில் கடந்த காலத்தில் நடந்த முறையற்ற அத்துமீறல்களை எல்லாம் விரிவாக பட்டியலிட்டுள்ளீர்கள். அதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதெல்லாம் நாடாளு மன்ற மக்களவை முன்மாதிரியான ஒற்றுமை யை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறி யுள்ளீர்கள். அதைத்தான் நாங்கள் கேட்கி றோம். கடந்த காலத்தில் நடந்த அத்துமீறல் களைப் போலவே 13ஆம் தேதியும் நடந்தது. பகல் 1.30 மணிவரை அந்தச் சம்பவம் அவை யில் நடந்து பெரும் களேபரம் ஏற்பட்டது. நாடே அலறுவதைப்போல ஊடகங்களில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஆனால் எதுவுமே நடக்காததைப்போல் நண் பகல் 2 மணிக்கே அவையைக் கூட்டி அஞ்சல் துறை மசோதாவை விவாதத்துக்கு எடுத்து அவையை நடத்தினீர்களே, ஏன்?
வீசப்பட்ட புகையின் நெடி அவையை விட்டு மறையவில்லை. எந்தத் தடயவியல் நிபுணர்களும் அவைக்கு வரவழைக்கப்பட வில்லை. ஆனால் எதுவுமே நடக்காதது போல காட்டிக்கொள்ள அவ்வளவு மெனக்கெட் டீர்களே எதற்காக?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை
நாங்கள் அன்றைக்குப் போராடியதன் விளைவாகத்தான் முறையான விசாரணை மேற்கொள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் பட்டது. இன்று உங்களின் கடிதத்தில் எது வெல்லாம் செய்யப்பட்டது என்று நீங்கள் கூறி யுள்ளீர்களோ அவை அனைத்தும் எங்களின் போராட்டத்திற்கு பின்னர் நடந்தவைகளே.
அவைக்கு “கோரிக்கை அட்டைகளைக் கொண்டுவருவது”, “அவையின் மையப்பகுதி யில் திரள்வது” ஆகியவற்றை தவிர்க்க உறுதி பூண்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். அவைத் தலைவர் அவர்களே! நீங்கள், பாஜக எதிர்க் கட்சியாக இருந்தபோது மக்களின் கவ னத்தை ஈர்க்க மையப்பகுதிக்கு திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? கோஷங் களை எழுப்பவில்லையா? பதாகைகள் ஏந்த வில்லையா? பாஜக எழுப்பிய கோரிக்கை களில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தா லும் உறுப்பினர்களின் உரிமை என்ற முறையில் அதனை ஆதரித்தே நிற்கிறோம்.
உலகில் எங்கும் இல்லாத அவலச் செயல்பாடு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து மிக உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவதைப் பற்றி யெல்லாம் உங்களின் கடிதத்தில் பேசி யுள்ளீர்கள். வேதனைகொள்கிறோம் சபாநாயகரே,
இந்திய நாடாளுமன்றத்தின் தலைவர், குடியரசுத் தலைவரே. கூட்டத்தொடருக்கான அழைப்பாணை, உறுப்பினர்களாகிய எங்க ளுக்கு அவரிடமிருந்தே வருகிறது. ஆனால் அவரை அழைக்காமலே நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை திறந்தீர்கள். அவைக்கு நடு வில் “வெல்” என்று சொல்லப்படும் மையப்பகு தியை நான்கு அடிக்கு பள்ளமாக வைத்துள் ளீர்கள். உலகின் எந்த நாடாளுமன்றத்திலும் இப்படியொரு அவலச் செயல்பாடு நடந்திருக்காது.
உறுப்பினர் டேனிஷ் அலி குறித்து பாஜக எம்.பி., ரமேஷ் பிதுரி பேசிய நாகரிகமற்ற, அவ மானகரமான வார்த்தைகள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி கொடுக்கப்பட்ட கடி தங்கள் உங்களின் மேசையில் தூங்கு கின்றன. ஆனால் நீங்களோ உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவதாக பெருமைப்பட்டுக்கொள் கிறீர்கள்.
ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லாத பிரதமர்
பத்து நிமிடத்தில் பதினொரு சட்டத்தை நிறை வேற்றிய அவையல்லவா இது! இன்றளவும் ஒரு விவாதத்தைக்கூட முழுமையாக அமர்ந்து கேட்காத ஒரு பிரதமரைத்தான் இந்த அவை பெற்றுள்ளது. இன்றளவும் ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்லாத பிரதமரைத்தான் இந்த அவை பெற்றுள்ளது. இவையெல்லாம் இந்த அவையின் பெருமைகளில் அடங்குமா, சபாநாயகரே?
இவ்வளவு சிறப்புள்ள இந்த அவைக்குப் பெருமை சேர்க்க இப்பொழுது நீங்கள் மற்றுமோர் உண்மையை கண்டறிந்துள்ளீர்கள், “எங்களின் இடைநீக்கம் சபையின் மாண்பை நிலைநிறுத்துமென்று”.
நாடாளுமன்றப் பாதுகாப்புக்குழு கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறைகூட கூட வில்லை. உறுப்பினர்கள் நினைவூட்டியும் இது நடைபெறவில்லை. இதுகுறித்து உங்களின் கடிதத்தில் எதுவும் கூறவில்லை. இதற்காக பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. எனவே, பதிலளியுங்கள் என்று உறுப் பினர்கள் எழுப்பும் கேள்வியும் அதற்கான போராட்டமும் தான் அவையின் மாண்பை நிலைநிறுத்தக் கூடியது.
அனுமதிச் சீட்டு வழங்கியவருக்கு அறிவுரை கூட இல்லையா?
கடைசியாக ஒரு முக்கியமான கேள்வி எஞ்சி இருக்கிறது. உங்களின் கடிதத்தில் ஒரு வரிகூட “அனுமதிச்சீட்டு” வழங்குவதில் எம்.பி.க்கள் எடுக்க வேண்டிய கவனம் குறித்த விமர்சனமாகவோ, அறிவுறுத்தலாகவோ இல்லையே. ஏன்? அவையில் ஊடுருவிய நப ருக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒரு நாடாளு மன்ற உறுப்பினரால் அனுமதிச்சீட்டு வழங்கப் பட்டு இருந்தால் பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர் கள் எவ்வளவு பொய்களை உற்பத்திசெய்து நாடெங்கும் விநியோகித்திருப்பார்கள்! எங்க ளுக்கு அறிவுரையும் தேசப்பற்றையும் வலி யுறுத்தி உங்களின் கடிதம் எத்தனையோ பக்கங்கள் நீண்டிருக்கும். ஆனால் இப்பொ ழுது உங்களின் கடிதத்தில் அதுகுறித்து ஒற்றைச் சொல்கூட இடம்பெறவில்லை.
சபாநாயகரே, அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு யாரும் விதிவிலக்கல்லர் என்பதை மக்கள் அறிவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.