districts

img

பட்டியலின மாணவர்கள் மர்ம மரணங்கள் கல்லூரி விடுதிகள் குறித்து நீதி விசாரணை நடத்திடுக!

திருநெல்வேலி, பிப்.19- திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை  புது மனை பர்க்கிட்மா நகர் அருகிலுள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் பட்டியலின மாணவர் விக்னேஷ் .இவர். தேனி மாவட்டம் போடிநாயக் கனூர் அரசு பொறியியல் கல்லூரி யில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த  நிலையில் அக்கல்லூரி விடுதியில் கடந்த 13/02/2025 அன்று இரவு கழிப்பறையில் மர்மமான முறை யில் இறந்து கிடந்ததாக மாணவரின்  பெற்றோருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். அவர்கள் தேனி அரசு மருத்து வமனைக்கு சென்ற போது மாண வர் விக்னேஷ் இறப்பு குறித்து முன் னுக்குப் பின் முரணாக, எறும்பு கடித்து இறந்து விட்டார் என்று கல் லூரி நிர்வாகமும் மாவட்ட காவல் துறையினரும் மாணவரின் பெற் றோரிடம் கூறியுள்ளனர். ஆனால்,  இறந்த மாணவரின் உடலை பார்க்க வேண்டும் என பெற்றோர் கள் கேட்டதற்கு,  பார்க்க முடியாது என காவல்துறை மறுத்துள்ளது. மாணவரின் பெற்றோரும் அவர்க ளுடன் சென்றவர்களும் கடுமை யான வாக்குவாதம் செய்ததாலும் போராட்டம் நடத்துவோம் என தெரி வித்த பிறகு இறந்த மாணவரின் உடலை பார்க்க அனுமதித்துள்ள னர். இறந்த மாணவரின் உடலில் கழுத்து. காது பகுதிகளில் காயம் உள்ளதாகவும் காயம் உள்ள பகுதி களிலும்  ஆசனவாயில் பகுதியிலும்  ரத்தம் வடிந்து இருந்ததாகவும் பின்னர் கல்லூரிக்கு சென்று கழி வறையை பார்த்த போது  கழிவறை முழுவதும் ரத்தம் சிதறி கிடந்துள் ளது.  இது குறித்து மாணவர் விக்னே ஷின் தந்தை செல்வத்திடம் சந்தேக மரணம் என்ற வகையில் புகார் மனு எழுதி வாங்கியுள்ளனர். மாண வரின் உடல்கூராய்வு முடிந்தவுடன் உடலைப் பெற்று ஊருக்கு செல் லுங்கள் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.  சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக தனது மகனின் உடலில் ரத்த காயங்கள் உள்ளதே என்று மீண்டும் கல்லூரி மற்றும் காவல் துறையினரி டம் கேட்டதற்கு, மேலும் சந்தேகம்  ஏற்படும் வகையில் பதிலளித்துள்ள தால் மாணவர் விக்னேஷ் உடலை வாங்க மறுத்து தனது மகனின் இறப் பில் மர்மம் உள்ளது. கொலை செய் யப்பட்டு இறந்திருக்கலாம் ( ஏற்கெ னவே இதே கல்லூரியில் ஏழு மாண வர்கள் மர்மமான முறையில் இறந் துள்ளதாக ஒரு தகவல் உள்ளது) ஆகவே தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மென வலியுறுத்தினர். உள்ளூரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொ டர்ந்து ஐந்து நாட்களாக நடத்தி வரு கிறார்கள். போராட்டத்தில் ஈடு பட்டுள்ளவர்களை பல்வேறு அரசி யல் கட்சித் தலைவர்கள் பட்டியலின அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து ஆதரவும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் எம்.சுடலைராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்க ளது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்தனர். மேலும் மாணவர் விக்னேஷ் இறப்பு குறித்து சிபி சிஐடி  விசாரணைக்கு உத்தரவிட வே ண்டுமென  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால், மாவட்ட செயலாளர் எம்.சுடலைராஜ் ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக் கையில் தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளனர்.