மதுரை, செப். 20- வழங்குவதில் பாரபட்சம் காட் டும் அதிகாரிகள் மீது ஏன் எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மது ரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஜோதி என்பவர் தொட ர்ந்த வழக்கு: மதுரை காமராஜர் பல்க லைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் படிப்பு 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பயில்வதற்காக விண்ணப் பித்து படிப்பைத் தொடர்ந்து வந் தேன் இந்நிலையில் எனது குடும்பச் சூழ்நிலை காரணமாக இடைநிற்றல் செய்தேன். பின்னர் மீண்டும் என்னுடைய பிஎச்டி வழிகாட்டி ஆசிரியரை மாற்றி மீண்டும் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர பல்கலைக்கழகத்தில் விண் ணப்பம் செய்தேன். இதனைத் தொடர்ந்து இளநிலை ஆராய்ச்சியாளர் படிப்பிற்கான உதவித்தொகை வழங்க முறைப்படி விண்ணப்பித்திருந்தேன் ஆனால் பல்கலைக்கழகம் எனக்கு உத வித்தொகை வழங்கவில்லை. எனவே தனது ஆராய்ச்சி படிப்புக்கு உரிய உதவித்தொகை யை பல்கலைக்கழகம் வழங்க வேண்டு மென மனுச் செய்திருந்தார்.
2017-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவிக்கு உதவித்தொகை வழங்க உத்தர விட்டது. தனி நீதிபதியின் உத்த ரவை எதிர்த்து மதுரை காமராஜர் பல்கலைகழகம் சார்பில் மேல்முறை யீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டு, மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, மாண விக்கு நான்கு வாரத்தில் உதவித் தொகையை வழங்க நீதிபதி உத்தர விட்டிருந்தார். ஆனால் பல்கலைக்கழகம் உதவித்தொகையை மாணவிக்கு வழங்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் புதனன்று விசா ரணைக்கு வந்தது. பல்கலைகழகப் பதிவாளர் நேரில் ஆஜரானார். அப் போது பல்கலைக்கழகம் தரப்பில், போதிய நிதி இருப்பு இல்லாததால் உதவித்தொகை வழங்கவில்லை. மாணவிக்கு வழங்க வேண்டிய உதவிதொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தாமதமும்-வன்கொடுமையே இதைக் கேட்ட நீதிபதி பட்டு தேவானந்த், “பல்கலைக்கழ கங்களில் ஆராய்ச்சி படிப்புகளில் பட்டியல் இன மாணவ மாணவி கள் மிகக்குறைவான எண்ணிக்கை யிலேயே சேருகின்றனர். மாணவி தனக்கு உரிய நீதி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். அவ்வாறு இருந்தும் தாம தம் போன்ற நடவடிக்கையால் மாண வர்கள் மீது வன்கொடுமை நடக்கிறது. பட்டியல் சமூக ஆராய்ச்சி மாண வர்களுக்கு உதவித்தொகை வழங்கு வதில் பாரபட்சம் காட்டுவதும் வன் கொடுமையே எனவே ஏன் உங்கள் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் உத்தரவிடக் கூடாது எனக் கேள்வி யெப்பிய நீதிபதி “இதுபோன்ற உத வித்தொகை தான் சில மாணவர்கள் கல்வி கற்க பயன்படுகிறது. பல்க லைக்கழகம் தனது சொந்த பணத்தை கொடுக்கவில்லை. பட்டியல் இன மாணவி என்பதால் உதவித்தொகை வழங்க பல்கலைக்கழகம் தாம திக்கிறதா? அடுத்தடுத்து கேள்வி யெழுப்பிய நீதிபதி, வரும் வெள்ளிக் கிழமைக்குள் சம்மந்தப்பட்ட மாண விக்கு உதவித்தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பட்டி யல் இன நீதிபதிகள் மிக்குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர் என கருத்து தெரிவித்து வழக்கு விசா ரணையை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.