மதுரை, மார்ச் 18- எல்ஐசி பொதுத்துறையாக நீடிப்பதற்கு சிஐடியு-வுடன் இணைந்து போராடுவது என்று லிகாய் (அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர் சங்கம்) தீர்மானித்துள்ளது. சிஐடியுவுடன் இணைக் கப்பட்ட அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர் சங்கத்தின் மதுரை கிளை-4-இன் மாநாடு மது ரையில் மார்ச் 18 சனிக்கிழமை யன்று நடைபெற்றது/ சி.ரெங்க நாதன் தலைமை வகித்தார். பொது மாநாட்டில் கிளைச் செயலாளர் ஜெ.கல்பனா அமைப்பின் கொடி யை ஏற்றி வைத்தார். வளர்ச்சி அதி காரிகள் எஸ்.ரவீந்திரன், எம்.ஆர். குமரேந்திரன், ஆர்.கிருஷ்ண குமார், கே.கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதி கள் மாநாட்டில் ஜெ.கல்பனா, ஆர். விஜி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர் சங்கத்தின் கோட்டச் செயலாளர் ஆர்.மாரி நிறைவுரையாற்றினார்.பி.வீரசின்ன ராஜ் நன்றி கூறினார். மாநாட்டில், 40 கோடி பாலிசி தாரர்களுடன் உலகிலேயே மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ. 42,30,616.95 கோடியாகும். எல்ஐசி பொதுத்துறையாக தொடர்வ தற்கு இந்திய தொழிற்சங்க மையத் துடன் இணைந்து போராடுவது, லிகாய் மட்டுமல்லாது 13 லட்சத்து 26 ஆயிரத்து 432 முகவர்களும் போராடுவதன் மூலம் தான் எல்ஐசி யை பாதுகாக்க முடியும். அனைத்து முகவர்களுக்கும் வயது உச்ச வரம்பு இல்லாத குழுக் காப்பீடு கிடைக்க முயற்சி செய்வோம் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.